Friday, August 31, 2012

நான்.....

விளக்கைத் தேடி வந்து
விதியை முடித்துக் கொள்ளும்
விட்டில் பூச்சியல்ல நான்...!

வசந்தத்தைத் தேடி வந்து


வலைக்குள் சிக்கிக் கொள்ளும்
வண்ணத்துப் பூச்சியல்ல நான்...!

வருணத்தைத் தேடி வந்து

சிறார்களிடம் சிக்கித் தவிக்கும்
தும்பியுமல்ல நான்...!

மண்புழுவைத் தேடி வந்து

தூண்டிலில் சிக்கிக்கொள்ளும்
சிறு கெளிறுமல்ல நான்...!

அளவில்லா ஆசைக்கு
அடிமைப்பட்டு ஆனந்தக்கூத்தாடும்
அற்ப அரிவையல்ல நான்...!

அயோத்தியோ அசோகவனமோ

அன்பின் வலியோன் அகத்தினில்
நீங்காமல் நிறைந்திருக்கும்போது

சிகரமே சில்லென்று கீழிறங்கினாலும்

சீண்டிப்பார்க்காத சீதரனின்
பத்தினி சீதை நான்...!

கோட்டைத் தாண்டினாலும்

கோடகம் மீறாத கொற்றவனின்
கொற்றவை கோதை நான்...!

எத்தனை இன்னல்கள் வந்தாலும்

எண்ணங்களை மாற்றாமல்
என்னவனின் நினைவோடு
வாழ்ந்து கிடக்கும் வாழ்வரசி நான்....!!

No comments: