Tuesday, December 28, 2010

நீயும் நானும்....






http://de.trinixy.ru/pics2/20071023/podb/9/love_11.jpg




இணையம் தந்த இணையில்லா
இலக்கணச் சுடரே....
உயிரின் ஓசையில் என்னுள்ளே
இசையாய் பரிணமித்தாய் - உன்
முகம் காணா காதலில் - என்
அகத்திரை கிழித்து ஐக்கியமானாய்...

தடுமாறும் மனதை தகர்த்தெறிந்து
தைரியம் கொடுத்த தடாகம் நீ...
எனக்காக நீ வரைந்த பாடல்களில்
உன் ஜீவனை காண்கின்றேன்...

கரங்கள் இறுக்கி நாம்
கவிதை பாடவில்லை...
உடல் உரசி உஷ்ணம் கிளப்பி - நாம்
கண்ணியத்தை கறைக்கவில்லை
கட்டி அணைத்து காதல்
செய்ய வேண்டும் என்று
அவசியம் கருதவில்லை


இறுக்கித்தழுவி இதழ்கள் வருடி - நாம்
இணைந்து இருக்கவில்லை...
ஒருமுறை கூட நாம் சந்தித்து
சரித்திரம் பேசவில்லை - ஆனாலும்
நாமும் இதயம் யாசித்து நேசிக்கின்றோம்...

காற்றோடு மட்டுமே நாம்
பாஷைகளை பரிமாருகின்றோம்...
நிஜத்தை மட்டும் நாம்
நிறைவாக நேசிப்பதால் - நம்
நிழற்படத்தை இருவருமே
விரும்பவில்லை...


வானத்தைப் பார்த்து ஏங்கும்
பூமியாய் மனம் இருந்தாலும்
செழிப்போடு இருப்பதாகவே
சிரித்து நாடகமாடுகின்றோம்...

நீ நினைப்பதை நான் சொல்வதால்

"அடியே என் பிம்பம் நீயடி" - என்று
சொல்லி குதூகளிப்பாய்... - உன்
மகிழ்வை சத்தமின்றி நானும்
ரசித்து அகமகிழ்வேன்...

உணர்வுள்ள விஷயங்கள்
உயிரூட்டமாய் ஒத்துப்போவதில்
இருவருக்குமே எல்லையில்லா
பெருமிதம்! இருந்தபோதும்....

இருவரும் இணைந்து
வசந்தமான வாழ்க்கை வாழ
ஆசைப்படுகின்றோம்...- உறவுச்
சிக்கலில் இணைந்து கிடப்பதால்
விதிவழியே நிற்கின்றோம்
வழி தெரியாமல்....வலியோடு...

உறவிற்கு உயிரூட்ட முடியாமல்
தொலைத்த இதயத்தை
மீட்க முடியாமல் தடுமாறி
உயிர் வதை படுகின்றோம்...
ராப்பகலாய் பேசித் தீர்க்கின்றோம்
தீர்வுதெரியாமல் விழிக்கின்றோம்

கனவுகள் கலைந்தாலும்
நினைவுகளோடு வாழ
தயாராகி தண்ணீர்குடித்து
தாகம் தீர்க்கின்றோம்...

காதல் செய்ததில் - விட்டுக்
கொடுத்து வாழப் பழகினோம்!
பழக்கம் இங்கு கைகொடுத்தது...
பார்க்காமல் பிரிகின்றோம்
உயிர் கொடுத்த உறவுகளுக்காக!!

என்னை நீ விட்டுக் கொடுத்து
விலகி விதியை சபித்து
நிற்கின்றாய்...
உன்னை நான் விட்டுக் கொடுத்து
விலகி விழிநீரோடு
நிற்கின்றேன்...

ஆனால்
நம் காதலை யாருக்காகவும்
விட்டுக் கொடுக்க இருவருமே
இசையவில்லை...
எங்கிருந்தாலும் நம்
காதல் கலங்கமில்லமால்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என்ற நம்பிக்கையில்
நீயும் நானும்.....

Thursday, December 23, 2010

அன்பான அம்மாவே...

http://i.pbase.com/o4/30/52730/1/91859921.IQKYu39G.IMG_0137.JPG




"அம்மா" இந்த மூன்றெழுத்தில் - எனக்கு
மூச்சுக் கொடுத்த மூன்றாம் பிறையே...
உன் திருக்கல்யாணத்தில் - நீ
கலைமகளாய்த் தெரிந்தாயாம்!!
இப்பொழுதும் அப்படித்தானே இருக்கிறாய்!

"பாண்டிய மன்னன் முப்பெருங்கடலில்
மூழ்கித்தான் முத்தெடுத்தான், நான்
முழுகாமல் முத்தெடுத்தேன்" - என்று
என்னிடம் பாடுவாயே!! பாக்கியமானேனே...
முத்தின் பெருமை சிப்பியின் தியாகத்தால்
இது உலகறிந்த உண்மையம்மா...

கல்யாண நாளிலிருந்து கணவனிற்காக
வாழ்ந்து கண்ணியம் காத்தாய்....
கருவுற்ற நாளிலிருந்து மகனிற்காக
வாழ்ந்து பெண்ணியம் காத்தாய்...
உன் அவதாரம்தான் என்ன?

ஒரு சிறு உதிரமாய் உன்னுள் நான்
உதித்து உயிர்ப்பெற - நீ
மசக்கையில் பட்ட பாடெல்லாம்
பார்த்தவர்கள் சொல்லி அறிந்ததைவிட
உள்ளிருந்து உணர்ந்து உறைந்தேன்

பத்தியமிருந்து என்னை பத்திரப்படுத்தி
நித்திரையின்றி நித்தம் தவித்து
சத்தமின்றி தொட்டு தொட்டு
முத்தம் பதித்து பொக்கிஷமாய்
போற்றி பெருமையாய் சிலிர்ப்பாய்...

எனக்காக வாழ்க்கையில்
சோக சுமைகளை சுமந்து
உறவில் சிரித்த உயிரோவியமே...!

எத்தனை ரணகளங்கள் எதனை ஏமாற்றங்கள்
அத்தனையும் உன் அன்பான உன் நெஞ்சில்
எனக்காக ஏந்திய தீபச் சுடரே...!

எங்களின் சந்தோஷத்திற்கு பாலம் அமைத்து
உடலை வருத்தி; உயிரை வெறுத்து
உள்ளத்தினுள் ஊமையாய் அழுத உத்தமியே...!

அன்னையாய் வந்து அன்பால் வளர்த்து
ஆசிரியையாய் இருந்து அறிவால் போற்றி
அம்பிகையாய் நின்று ஆசியை தந்து
ஜணனம் கொடுத்து மரணம் பெற்ற
என் மாசில்லா மணிவிளக்கே...

இனியொரு ஜென்மம் வேண்டுமம்மா...
பிறப்பும் பெண்ணாய் இருந்திட வேண்டுமம்மா...
உன்னை என் கருவறையில் சுமந்திட வேண்டுமம்மா...!
அதற்கு உன் வரம் வேண்டுமம்மா...


Wednesday, December 22, 2010

உறங்காத நினைவுகள்



http://www.punjabicomments.co.cc/wp-content/uploads/2010/11/jionda-reh.jpg






பனி உறைந்த விடியல்
விடிந்த இரவை நினைத்து
அர்த்தமற்ற ஆத்திரம்!
உறங்காத உன் நினைவுகளோ
சுவை மிகுந்த தருணங்கள்...

பகலில் உன்னிடம் பழகுவதற்கு

இந்த இரவில்தான் ஒத்திகை...!
நீ விட்டுச் சென்ற நேரங்களில்
இந்த தலையணையும், போர்வையுமே
என்னை விட்டு அகலாத தோழிகள்!

எத்தனையோ முறை ஊடலால் - நீ

உக்கிரவார்த்தைகள் உபயோகப்படுத்தி
வெளியேறிச் செல்கையில் - என்
விழிநீரை தனக்குள் வாங்கிய
என் தலையணையும் தாய்மடியே...

உன் குறுநகையில் கண்ட

காதலின் சுகம் கணக்கிலடங்கா...
இடர்பாடில்லமல் இசைகொண்ட - உன்
பேச்சை கேட்கவே காதுகளில் - நான்
எந்தவித கனத்தையும் சேர்ப்பதில்லை

வெயில் கால மழையில் என்னில்

வந்த வசந்த காலம் நீ - மழை
நீரைத் தாங்கும் தாவர இலையாய்
உன் பச்சை வண்ண நினைவுகள்
பசலையாய் என்னுள்ளே...

நிலவை மறைக்கும் மேகமாய்

மோகங்கள் தேகத்தை சூழ்ந்தாலும்
வேகமாய் தவிர்த்து தளிர்ப்பேன்
என் பரிதவிப்பை ஒருநாளும்
உன்னிடம் உடைப்பதில்லை...!

உன் கேலி என் பெண்மையை மட்டுமல்ல

என் காதலையும் கொச்சையாக்கினால்
ஆறாத வடுவாய் அதையும் நான் - உன்
நினைவோடு சேர்ந்து சுமக்க வேண்டும்
சுகமான சுமையை மட்டுமே விரும்புகிறேன்

நினைவுகளை சுமந்து கொண்டே

வாசலில் கோலமிட அமர்கின்றேன்
ஒரு புள்ளி, ஒரு வளைவு
சுற்றி இழுத்து முடிக்கின்றேன்
உன் பெயரே கோலமாய் வாசலில்...!









Friday, December 17, 2010

அறிதலும் புரிதலுமாய்....

http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs1140.snc4/148231_131111070284088_100001555869268_180096_6639433_n.jpg



விண்மீன்கள் விட்டுச்சென்ற விடியல்

விழிகளோ நெருப்புக் குளியலாய்...

நெஞ்சமோ தணலாகி தவிப்பாய்...

அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்


உரையாடலால் உலா வரும் _ நம்

குரல்கள் தென்றலாய் தேசமெங்கும்

கதைப்பதற்கு அவசியமான செயல்கள்

ஏதுமில்லை...ஆன போதும் கேட்பாரற்று

சலனமின்றி கிடக்கும் எனது இனிய

அலைபேசியும் வருத்தத்தில் முழுவதுமாய்

உனக்கும் எனக்கும் இடையிலான

வெற்றிடத்தை சொல்லி விம்முகிறது....


அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்

உணர்வு பரிமாற்றங்கள் மென்மையாய்

வரம்பு மீறா வார்த்தைகளுடன் _ உன்

தெரிவிக்கமுடியாத ஏக்கத்தை

நமக்குள் நடக்கும் ரகசிய யுத்தத்தில்

சத்தமின்றி _ நீ _ இட்டுச் சென்ற

முத்தமும் என்னுள் மொத்தமாய்....

Wednesday, December 15, 2010

என் காதலின் கவிதை

http://s2.hubimg.com/u/43157_f520.jpg




என் காதலின் கவிதையை
விரல் கொண்டு எழுதுவதால்
வீணாகப் போகுமென்று - என்
விழி இமைகளின் விளிம்பில்
மையிட்டு எழுதுகிறேன்...

என் காதலின் கவிதையை
அதரம் கொண்டு எழுதுவதால்
அழிந்து போகுமென்று - என்
உதிரத்தின் வாயிலாக
உறைய எழுதிகிறேன்...

அன்பே...
அக்கரையிலிருந்தும்
ஆள்கிறாய் என்னை
நானோ
நெடுந்தூர வானமாய்
தொடர்கின்றேன் உன்னை...

வெற்றிடமாய் இருந்த
இதயமோ நீ
வந்து தங்கியதால்
நந்தவனமானது!

அனுமதியின்றி உள்ளே
நுழைந்த உன்னை எந்த
சட்டத்தின் கீழ் தண்டிப்பது?
விசாரணையின்றி உனை - என்
விழிகளுக்குள் சிறை
வைக்கின்றேன்....

கண்களுக்குள் கவிபாடும்
கண்ணாளனே...
உன் மேல் கொண்ட மோகத்தால்
நான் கொண்டேன் மௌனம்...
உயிராய் உணர்வாய் உன்னுள்
எப்போது நான் வருவேன்?

வாழ்வென்பது உன்னோடுதான்
அதுவரை நான் பண்போடுதான்
உறவென்பது உன் உயிரோடுதான்
அதுவரை நான் உன் நினைவோடுதான்.....

வரமாய் வந்தவள் நீ

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCKHyQmzl4ief_9wJ4dBCdHBE-CRhOrS249RtKs37tPrm_Uzj8



ஆசைகளை சொன்ன அன்னக்கிளியே....
என் நேசமது உனக்கு புரியவில்லையா...
ஆயிரம் பிறவிகள் அளவு வேண்டாமடி...
எத்தனை பிறவிகள் ஆனாலும் - அது
ஐந்தறிவு ஆறறிவு ஆனாலும்
உன் துணை நான் தானடி...!
Join Only-for-tamil

பாசம் மட்டுமல்லடி பகிர்ந்துகொள்ள
பலவகைகள் உண்டு!
பசி - புசி, துக்கம் - தூக்கம்
இன்பம் - துன்பம், அழுகை - சிரிப்பு
நிறைவு - குறைவு, காதல் - காமம்
பகிர்ந்து பருகுவோமடி...!
Join Only-for-tamil

நிழலாய் மட்டுமல்ல நீக்கமற

இணைந்து ஒன்றாய் சுவாசித்து
யாசித்து உணர்வோமடி...!
நீர் முத்துக்களை மெல்லமாய்
முத்தமிட்டு சுவைப்பவளே...
உன் இதழ்வழி நுழைந்து - என்
உயிர் மூச்சால் உன்னை அனுதினமும்
குளிர்வித்து குளிர்வேனடி....!
Join Only-for-tamil
அணியும் ஆடை மட்டுமல்ல
என் ஆன்மாவும் நீதானடி...!
உப்பாய் இருந்து உயிருள்ளவரை
நினைக்கச் செய்தவளே
என் அறுசுவையும் நீதானடி...!
Join Only-for-tamil
சுட்டெரிக்கும் வெயிலில்
சுற்றி வந்தால் உன் மேனி
கருத்து விடுமடி...! அதன்பால்
என் இதயமும் கருத்து விடுமடி...!
Join Only-for-tamil
வியர்வை முத்துக்கள் மட்டுமல்ல
என் கண்ணின் மணிகளையும்
எடுத்துத் தருகிறேனடி ...!
சேர்த்து கோர்த்து - உன்
வெண் சங்கு கழுத்தை மிளிரச் செய்யடி...!
Join Only-for-tamil
காணும் கலைகள் மட்டுமல்ல - நான்
பார்க்கும் பாரதமும் நீதானடி...!
விரிந்த மார்பு, விரல்கள்,
தாயுமானவன் மடி போதாதடி...!
உச்சி முதல் பாதம் வரை
உன் ஒருத்திக்கு மட்டும் தானடி...!
Join Only-for-tamil
கண்ணிற்குத் தெரியாத கடவுள் வேண்டாமடி..!
கண்ணிற்குத் தெரிந்த - என்
காவிய தெய்வமே நீ தானடி...!
அன்னையாய்...அம்பிகையாய்
மனைவியாய் ... மந்திரியாய்
என்னை ஆட்கொண்டவளே...
Join Only-for-tamil
உதிரம் சுமக்க ஆசைப்பட்டு
என்னை உச்சியின் சிகரத்திற்கு
உயர்த்திய என் உயிரே.........
வரமாய் வந்தவள் நீயடி...
என் வாழ்விருக்கும் வரை - உன்னை
வாட விடமாட்டேனடி....
Join Only-for-tamil

Tuesday, December 14, 2010

சித்திரமும், சித்தனும்

இனி
கண்களை குளிர்விக்கும்
மின்னஞ்சல்களோ

இதயத்தை மலரவைக்கும்
மின்னஞ்சல்களோ
உம்மை வந்து சேரப் போவதில்லை!

உங்களது வேதனைக் கதைகளை
உங்களின் இதய வீதிகளே
பறைசாற்றட்டும்!


விழிகளுக்குள் உன் விழி
வைத்துப் போற்றினாள்...
விடியும்வரை விசாலமாய் கனாக் கண்டாள்...
விடிந்தபின் கண்ட கனாக்கள் யாவும்
விட்டில் பூச்சிகளாய் மாறியதும் துடித்து
துவண்டாள்...


தலைகாவிரிக்குக் கண்ணீரை தாரை
வார்த்தவள்
வைகைநதியாய் கண்ணீரும்
வற்றிப் போகவும்
வானம் பார்த்த பூமியாய்
வாடித்தான் போனாள்...
வாசமானவன் வாசல் வரை
சென்றுதான் பார்த்தாள்...


எத்தனை ஜனனம் ஆனாலும் _ நான்
அத்தனை ஜனனத்திலும் உயிராய்
உன்னுடன்

உடன்வருவேன் என்று உருகி
உரைத்தவன்
ஊமையாய் உடன்கட்டை
ஏறிவிட்டான்...


சொல்லாமல் தத்தளித்த சோலைக் குயில்கள்
சொல்லிப்பறந்தன திசை எங்கும்...
சிரித்து விளையாடியவள்
சித்திரமாய் சுவற்றில்!
சித்தம் சிதைந்தவன் சித்தனாய்
பூவுலகில்!