Monday, August 13, 2012

உரிமையும், புரிதலும் உன்னிடத்தில் ....

நீரூற்றாய் இதயம் பொங்கி எழ
பூங்காற்றாய் உணர்வுகள் உயிர்ப்பெற
பற்றற்ற மோகங்கள் பண்பாட
மற்றுமொரு வார்த்தை சொல்ல வழியின்றி
சட்டென்று பேசிய உன் காதல்மொழி கண்டு
கட்டவிழ்ந்த தென்றலாய் தடுமாருகின்றேன்
மொட்டவிழ்ந்த மலராய் இதயம் மலர
பொட்டொன்று வைத்து பூரிக்கின்றேன்....

நொய்யலாற்றின் ஓரத்தினில் - நீ
தந்த நிகழ்வுகளை சுமந்தபடி
நொடிக்கொருதரம் உன் நினைவோடு
போரிட்டே புகையாகின்றேன்...!

இதயமென்னும் மேடையில் - என்
கவிதைகளை செதுக்கிவைக்க
தமிழ் முழங்கும் மேடையில் - அதை
பொழியச் சொல்லி விளிக்கின்றாய்..!
பாடிய பாட்டின் பொருளெல்லாம்
உனைச் சார்ந்தே இருந்திருக்க
பாவலரும் ஏவலரும் சூழ்ந்திருக்கும்
சபைதனிலே பாடத்தான் வேண்டுமோ...?

போட்டி-பொறாமை, வஞ்சம்-சூழ்ச்சி
அறியாத பெண்மைக்கு அறியவைத்து
பாசம் - வேசம் உள்ளிருக்கும்
பேதத்தை உணர்த்திய பெருந்தகையே....

கணக்குகள் போட்டே வாழ்க்கை
வழக்காடிக் கொண்டிருக்கிறது!
சரியான விடையை கணக்கிடாமல்
உரிமையும் பிழையாகி நிற்கின்றது...!

உரிமையும், புரிதலும் உன்னிடத்தில்
இருப்பதினால் - என் தெளிதலும்
தீர்க்கமாகி உன் பின்னே மௌனமாய்
பயணிக்க பழகிக்கொண்டிருக்கிறது.....

No comments: