Friday, August 10, 2012

வாரநாட்கள் நீ.......

அன்பே...

திங்களுக்கும் ஞாயிறுக்குமிடையில்
இருக்கும் கிரகங்களாய்
நீயாக வேண்டும்...
சப்த நாட்களும் சப்தமின்றி
உன்னோடு சம்-சாரம் செய்யவேண்டும்...
ஞாயிறின் விடியலில் தொடங்கி
சனியின் அந்திமம் வரை
சுருதி குறையாமல்
சுவரம் சேர்த்து கானமிசைக்க வேண்டும்...
 
இப்படி ஒவ்வொரு நாளும்
எனக்குள் உரமாகிப்போன - உன்னை
என் வாரநாட்கள் என்பேன்...
என்னுள் நாளாகிப்போன நீ
என் வாழ்வாகிப் போனாலென்ன?

புதிரற்ற பதிலோடு - உன்
எழுத்தையும் உள்ளத்தையும்
தயக்கமின்றி தாரைவார்ப்பாயா?
விசனமின்றி விடையளிக்க
விரைந்து வா....
விசாரதனே.....!!

No comments: