வெட்டப்படுவதையே எதிர் நோக்குகின்றேன்.....
வெயிற்கால இரவின் தாக்கம்
முன்பனி பெய்யும் நேரத்திலும்
முழுமையாய் மனதினுள்....
"பகைவருக்கருள்வாய்" வேதாந்தம்
புரியாமல் விழிக்கையில்
சொந்தங்களின் போக்கில்
வேதாந்தம் விளங்குகிறது...
மொத்த பொழுதுகளும்
ஒற்றை வரிசையாய்
அழுது தொலைக்கின்றன...!
வரப் போகும் நாட்களை
பயத்தோடு எதிர்பார்த்தாலும்
இதயத்தில் இடைவெளியில்லாத
குருட்டு நம்பிக்கை
எதையும் கடப்பேன் என்று...!
மறக்க முடியாத நிகழ்வுகள்
மனக்கண்முன் நிழலாட
இன்னல்களை மட்டுமே சந்தித்த
பாவப்பட்ட இதயம் பண்பட்டு
அன்பிற்கான வட்டியினை
கடந்த பொழுதுகளிலிருந்து
கொடுக்கக் கற்றுக்கொண்டேன்
பாவப்பட்ட இதயம் பண்பட்டு
அன்பிற்கான வட்டியினை
கடந்த பொழுதுகளிலிருந்து
கொடுக்கக் கற்றுக்கொண்டேன்
ஒவ்வொரு முறையும்
யாரோ ஒருவரால்
வெட்டப்பட்டாலும் மீண்டும்
தழைத்து விடுகின்றேன்....
சில நேரங்களில், தழைப்பதற்கு
நாட்களாகவோ மாதங்களாகவோ.....
ஆனாலும் தழைத்து விடுகின்றேன்!!
இயல்பு நிலையிலிருந்து
எப்போதும் எதற்காகவும்
மாற விரும்பவில்லை..
ஆகவே
வெட்டப்படுவதையே
வெட்டப்படுவதையே
எதிர் நோக்குகின்றேன்.....
மீண்டும் தழைப்பதற்கு....!!