Thursday, April 28, 2011

வேண்டுமே.....

மாலை நேரச் சூரியன்
மயங்கிய நேரம்!
கடற்கரையின் காலடியில்
பார்க்குமிடமெல்லாம்
உன் பாதங்களின்
சுவடுகளாய் தெரிகிறது!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்....!!
Join Only-for-tamil
நேற்று சந்தித்த
இறுதிச் சந்திப்பில்
நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம்
இன்னும் காயாமல்...
எப்போதும் காயாமல்
இருக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

என்னை
யார் கடந்து சென்றாலும்
நீ கடந்து போவது
போன்றதொரு சிலிர்ப்பு!!
எப்பொழுதும் நீ
என்னை கடக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!
Join Only-for-tamil
உன் எழுத்துக்களிலும்
என் எண்ணங்களிலும்
வளர்ந்த நமது காதல்
பெரு மழையாய்
பொழிகிறது!
வறண்ட வானிலை
வராமலே இருக்க வேண்டுமே!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

நமது முதல் சந்திப்பில்
என்னிடமே வந்து
என்னை விசாரித்த
உனது சீண்டலை நானும்
என் கரங்களை எடுத்து
உன் மார்போடு சேர்த்து நீயும்
பரவசமடைந்தோம்...!!
பரவசம் பருவந்தோறும்
படர வேண்டுமே...!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்
Join Only-for-tamil
பயணம் இனிதானது
உன்னோடு பயணித்தால்...
வாழ்க்கைப் பயணமும்
உன் ஒருவனோடு இருந்தால்...
பேரிரைச்சல் பெருமமைதி
ஆக வேண்டுமே....
அதுவும் உன் ஒருவனால்
மட்டுமே மாற்றப்படும்...!

உன்னை வெல்வேன்...




கொல்கின்ற தனிமையில்
காலத்தை அளக்கின்றேன்
உறவைக் கொடுத்து
உயிரைப் பிடுங்கும்
உன் வார்த்தையில்
உலகம் மறந்து போனது...
என் காதலின் கண்ணீரில்
கடல் மட்டமும் உயருது!
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQafE9sSE3aUkyXcuOE_7KOM1t6FTwBmdDBxESE1pdvLG-Zseee
மூச்சுக் காற்றாய்
உள்ளே நுழைந்தவனின்
விழிகளின் சந்திப்பில்
விலகலின் வேகம்!

உனக்காகவே உயிர்க்கின்றேன்
உனக்காகவே மரிக்கின்றேன்
என் விதியின்
எண்ணம்தான் என்ன?
விளங்கவில்லை!!!

எங்கேனும் ஒரு தென்றல்
உன்னால் என்னுயிரை
தொட்டுச் செல்லாதா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTsPO5ud-Te40yoKwRwQ-p45rUCJgXuIonqDJYJLK-FimAaxSZY
ஏக்கமாய் எழுதும் எனது
கவிதைகள்
மிதந்து வரும் போது
உன் பார்வையின் பாரம்
பட்டுச் சாகாமலே பறக்கின்றன!

என் இல்லத்தின் விளக்கொளி
மட்டும் நீயல்ல!
என் இதயத்தின்
கர்ப்பக்கிரகமும் நீயே...

உயிருக்குள் உயிராய்
ஊடுருவிய உன்னை
என் உணர்வில் மட்டுமல்ல..
என் உதிரத்திலும் கரைப்பேன்...

சேர்த்து வச்ச ஆசைகள்
எல்லாம் அடைக்கலமாய்
உன் காலடியில் கொட்டுகின்றேன்

புறந்தள்ளி என்னைக் கொல்லும்
உன் உள்ளத்தில் எனக்கோர்
இடம் கொடு இல்லையேல்
கொஞ்சம் விஷம் கொடு..
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQqPo1rsAAaROXt02wgzEOW8YlaUg1dXqTIebamc3zC7fv3ILh79A
கண்ணீரில் கரைந்தாலும்
காலத்தை இழந்தாலும்
காதலில் உன்னை வெல்வேன்...