Friday, April 20, 2012

இதுதான் காதலா....?

கவிதையின் கருத்துருவே!
’உள்ளன்பு’ உணரவில்லை
உன்னைக்காணும் வரை...
இதற்கு மேல் சொல்லவும்
மொழியில்லை என்னிடம்...
 http://www.geotamil.com/pathivukalnew/images/stories/manakkan_chapter4_1.jpg
என்னை நேசித்து நெகிழ்ந்தவனே...
உன் மனம் நோகாமல் இருந்து
இறக்கத்தான் நினைக்கின்றேன்...
பச்சைப் பசேலெனும் தோட்டத்தினூடே
பலகவி படைக்கும் உன் வார்த்தைகள்
சொல்லும் உன் காதலை...
 
இச்சை கொண்ட இதயம் இனித்திட
இலகுவாய் வார்த்தைகளை வீசுவாயே...
அதுதான் நான் உணரும் கீர்த்தனை..!!
எத்தனையோ விடயங்களை
அறிந்தும் அறியாமலும்
புரிந்தும் புரியாமலும் இருந்தவள்
முழுமையாய்ப் புரிந்தது
உன்னை மட்டுமே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsULuO72-i3i_-ARkAu0HIYNkI96yHRBxbwlNdexWGnxhjhJDJycxnkbj1RbBRHEWDOMYu7XQYJ8IvI_dCQAvnmUPBE83v5GMHGdy52K2WnuT_QiGzroCj_5xSBLdZpFh-Qu8WYmJxkJ7c/s400/Lovely+Heart.jpg
எத்தனையோ கசப்புகள்
நம்மிடையே தோன்றினாலும்
விழிநீரில் தள்ளாடும்போதெல்லாம்
கசிந்துருகி உன்னிருப்பை - என்னிடம்
வார்த்தைகளால் வாஞ்சையாய் கொட்டுவாயே
இதுதான் காதலா....?

சிறு குழந்தை போல் அடம்பிடித்து
அழுது ஆர்ப்பரிக்கும் என்னை
இழுத்து அரவணைத்து - உன்
ஆத்மார்த்தமான அன்பை
உள்ளங்கை சூட்டினால் அழுத்திப்
பிடித்து ஆறுதலளிப்பாயே....
அதுதான் காதலோ....?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEho5xjlzAldILED_z1mtEBGemOcw8JzL1rxKdMcMn21YApeMhooUmnu5gzrHGm0NCAY1OinrYazoSU-c_A7t6KP-BfUIhYzgrV1jv0kR748co1FELhThIO09RI918ksS7rJ0NGzL3g4OeJn/ 
 
நலமின்றி துவண்டிருந்த நேரத்தில்
நொடியும் விலகாமல் - ஒரு
தாய்மையாய் தாங்கினாயே....
மீண்டும் நலமிழக்க இதயம் ஏங்குகிறது!
காதலின் கவித்துவத்தை - உன்
வாசனை வரிகளால் சுவையோடு
நீ சொல்லி இதழ் பதித்த - என்
காதுமடல்கள் இன்னும் சிவந்தபடி....

உனைப் பிரியும் நேரங்களிலெல்லாம்
விழிகளிலிருந்து பிரியும் நீரை - உன்
பார்வையினால் தடுத்து நிறுத்தி
எவரும் அறியாமல் தலையசைப்பாயே...
அந்த தருணங்கள் மீண்டும் வேண்டாமடா!
என்னை ஆறுதல் படுத்தி - நீ
கலங்கிபோய் கையசைப்பாயே....
இந்த நிறைந்த காதலிற்கு முன்
வேறெதுவுமே எனக்கு மிகச்சாதாரணமடா......











 


Thursday, April 19, 2012

தொடமுடியாத தூரத்தில் நீ .........

உன்
நினைவுகளால் நிரம்பிய
இந்த இடத்தை
சுற்றி சுற்றி பார்க்கின்றேன்
நடந்த நிகழ்வுகள்
முன்னும் பின்னும் சுழல
கவிதையாய் மிதக்கின்றேன்....
 
கவலைகளில் காயம் படிந்த
கனத்த இதயம் - உன்
விழிகள் வீசிய நேசத்தில்
அடுத்தவர்க்கு அழகு சேர்க்கும்
பட்டாம்பூச்சியாய் ஆனது!
கானகத்தினுள் ஊடுருவி
ஓசை தரும் காற்றைப்போல்
எனக்குள் ஊடுருவி
இசையாய் பரிணமிக்கின்றாய்...
எழுதிய எண்ணங்களை
வார்த்தைகளாக சேகரித்து - உன்
வாசிப்பிற்காக வைத்திருக்கின்றேன்
என்றாவது ஒரு நாள் வந்து
பார்வையால் மீட்டிச் செல்வாய்
என்ற நம்பிக்கையிலேயே.....
 
தொடமுடியாத தூரத்தில்
நீ இருந்தாலும்
இரு இமைகளுக்கான
இடைவெளியாக எண்ணியே
இணக்கமாகின்றேன்...
மோகத்தைக் கொல்ல முடியாமல்
தாகத்தைத் தீர்த்துக் கொள்ள
தேகத்தைக் கொல்லும்
மாந்தர்களுக்கு மத்தியில் - நீ
ஒரு புத்தனாய்
வலம் வருகின்றாய்....
 
எங்கு திரும்பினாலும்
நீயாகவே தெரிகின்றாய்....
யாருடன் பேசினாலும் எதிரில்
நீ பேசுவதாகவே நிற்கின்றாய்...
உலகமே மறந்து போய்
உன் நினைவுகளே
உலகமாய்த் தெரிகிறது....
என் பாரங்களை
உன்னிடம் இறக்கிவைக்கும்போது
தேவனின் கைகளில் தஞ்சமாகும்
ஆட்டுக்குட்டியாய் உன்னிடம்
அடைக்கலம் ஆகின்றேன்....