Monday, August 13, 2012

அன்பான அப்பா......

சிறு வித்தில் எனக்கு
இந்த பிரபஞ்சத்தைக் காட்டிய
பெருந்தகையே....
திசைகளறியாப் பருவத்தில்
திங்களாய் ஞாயிறாய்

வழிகாட்டிய வாசுதேவரே...
இதுவா அதுவா
என்று தாவிக்குதிக்கக்காத்திருக்கும்
மதில் மேல் பூனையாய்
இருந்திருந்த வேளையில்
விரல் பிடித்து
நல்வழி பார்த்து குதிக்கச்செய்த
குறுந்தொகையே....
ஒரு நூலின் நுனியில் நான்
மறு நுனியில் உன் கரங்கள்
எல்லையற்ற சுதந்திரத்தை
எடுத்துக்கொடுத்து
எல்லை கடக்க எத்தணித்தால்
லாவகமாய் இழுத்துப்பிடித்து
இதமாய் எடுத்துரைப்பாயே
அந்தப் பக்குவம் யாருக்கு வரும்?
வெயில் மழை பாராமல்
எங்களுக்காக உழைத்து
ஓடாய்ப்போன ஒப்பில்லா
உப்பிலியப்பரே...
எத்தனை ரணகளங்கள்
அத்தனையும் எங்களுக்காய்
சுமந்த சுக்கிரீவரே....
சுகத்தையும் துக்கத்தையும்
ஒன்றாய்ப்பார்க்க கற்றுக் கொடுத்த
கற்பக விருட்சமே.....
காலங்கள் எத்தனையானாலும்
அத்தனை காலங்களிலும்
எங்களோடு நீ வரவேண்டும்...
எத்தனை பிறப்பானாலும்
அத்தனை பிறப்பிலும்
”அப்பா” நீயே அப்பாவாகவேண்டும்
வரம் வேண்டி வணங்குகின்றேன்

உன்னை.....!!

No comments: