Wednesday, August 8, 2012

நமக்கேன் வாதமும், வஞ்சணையும்??

எதை நினைத்தழுவது
இப்பொழுது அதற்கு சாத்தியமில்லை
இன்றைய வாழ்வை நியாயப்படுத்த
நேற்றைய வாழ்வை வருத்தும்
புலம்பெயர்ந்த பொழுதுகளை
தூசி தட்டிப்பார்க்க விரும்பவில்லை....
நீ கொடுத்த நம்பிக்கையே
நாளும் எனக்கு ஊக்கமருந்து....
இதோ ஊக்கத்தில் ஓர் ஆக்கம்....!!
பௌர்ணமிப் பொழுதில்
வெளிச்சமாகும் வானம்!
ஒளியில் குளிரும் பூமி....
பூரணச் சந்திரனையும்
கிரகணம் பிடிக்கும்!
நிலவின் ஒரு பதியை
ராட்சத பாம்பு
மெல்லத் தின்று விழுங்கும்!
தேகத்தில் ஒரு பாதி
பலமிழந்து மறைந்தாலும்
மற்றொரு பாதி மிளிர்ந்து
ஒளியில் சிரிக்கும்!
வந்து போகும் வான்மதியே
வளர்வதையும் தேய்வதையும்
வாடிக்கையாய்க் கொண்டிருந்தாலும்
வஞ்சணையின்றி வழிபார்த்து நடக்கிறது!
வந்து போகும் நமக்கேன்
வாதமும், வஞ்சணையும்??
பிறப்பும் இறப்பும்
பொது நலமே...!
சுயநலமின்றி ஒளி காட்டும்
சூரிய சந்திரராய்
சொற்ப நொடிகளாவது வாழ்ந்திருவோமே...!

No comments: