Tuesday, August 7, 2012

வாய்ப்பளிப்பாயா வாசகனே..??

நினைவுகள் நிரம்பிய
இதயமிது...!
உன்னைச் சார்ந்த நினைவுகள்
நீக்கமற நிறைந்திருப்பதால்
நோக்கும் காட்சிகளெல்லாம்
பசுமையாய் உன்னைப்போல்...!

எல்லையற்ற வான்வெளியில்
முகில்களின் கூட்டம்
தடையின்றி படர்ந்து
புவியினை நோக்கி தன் நேசத்தை
சாரலாய்க் கொட்டுவதைப்போல்
ஆசைகளற்ற உன்னிதயத்தில்
ஒரு முகிலாய் நானும் படர்ந்து
என் நேசத்தை உன்னிடம்
கொட்டிக் கொண்டேயிருக்க
ஆசைதான்....

சந்தங்கள் பல நூறு படைத்தும்
சந்தேகங்கள் தீரவில்லை காதலில்!
கந்தலாய் இதயமும் நொந்தபடி...
அந்தி வந்த போதும் எந்தன்
சிந்தையில் நிம்மதியற்ற நிலை..!

என் எழுத்துக்களைப் பார்க்காதே
என் எண்ணங்களைப் பார் - என்
இதய வீதியில் உன் சார்ந்த
சம்பவங்கள் மட்டுமே கூக்குரலிட்டு
கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன...

இமைகள் இணையும் தருணங்களிலும்
அவை பிரியும் நேரங்களிலும்
இடைவெளியில்லாமல் தொடர்கின்றாய்....
மறப்பதற்கும் மறுப்பதற்கும்
மனமின்றி மனம் போகும் - உன்
நிழல் வழியே தொடர்கின்றேன்....

யாசகம் கேட்டு நிற்கின்றேன்
வாய்ப்பளிப்பாயா வாசகனே..??
யோசனை தவிர்த்து - நீ
மெதுவாய் விழியசைத்தால்
நானும் வலியிழந்து மோட்சமடைவேனே....

No comments: