Friday, August 24, 2012

எல்லை தாண்டிய காதல்...

சூரியப்பார்வையில் அரும்பும் ஆளானது - இந்த
ஆரியனின் பார்வையில் நானும் பெண்ணானேன்....
வேலிக்கும் எல்லையுண்டு - இந்த
பொலிவிற்கும் அவிழ்ப்புண்டு!
கம்பியின் கரங்கள் நெறித்தாலும்
வெம்பி விடாமல் மீறிடுவேன் - உன்
கரங்களுக்குள் மலர்ந்திடுவேன்...!
பாக்களை நீ தொடுத்து வைத்தால்
பூக்களாய் உன் மடியில் விழுவேன்...!
தென்றலாய் நீ தழுவிச் செல்ல - உன்
மன்றம் வந்து சேருவேன் செல்லியாய்..!
பனித்துளியில் பூ சிரிப்பது போல் - உன்
கனிச்சிரிப்பில் நான் மலர்ந்திடுவேன்...!
எல்லைகள் எத்தனையானாலும் - என்
செல்லைகள் தவிர்த்து உனைச்சேருவேன்...
 










No comments: