Tuesday, June 21, 2011

நீயும் வள்ளல்தானே...!

ஊர் உறங்கிய பின்னும்
உலா வரும் நிலவாக
உறங்காமல் உலா வருகின்றேன்
உன் உயர்ந்த நினைவுகளுடன்!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=1030077352725&id=d80a75ca8104afd2bb2af57107bbed34
என் கனவிற்குள்
என் அனுமதியின்றி
உன்னால் மட்டுமே
உள்ளே நுழைய முடியும்!

இதோ இங்கு வீசும் காற்றுடனும்
பேச ஆரம்பித்துவிட்டேன்...
தோட்டத்து மரமும் தோழியாகி
யோசனை சொல்கின்றது!

இரவினில் தேம்பியழும்
பூனையின் அழுகுரலில்
எப்போதும் நடுங்கும் இதயம்
இப்போதெல்லாம் அதை
தடவிக் கொடுக்க தயாராகின்றது!

http://ts1.mm.bing.net/images/thumbnail.aspx?q=996704387972&id=7056ec1f50d2408087ec5ece02770fef
ஏதோ ஒன்றினால் இதயம்
பலமடையும் என்பதை
உன் வரவால் உணரமுடிகிறது!
இந்த உயிர்த்துடிப்பு இயங்குவதன்
நோக்கமும் உனக்கான ஆக்கம்தான்!

உனது நேசத்தின் நெருக்கத்தில்
அமைதியாகும் என் சோகங்கள்!
என் காதலின் பயணத்தில்
ஓய்வு என்பதே கிடையாது!

ஆதலால் அன்பே.....

கடையேழு வள்ளல்களின் கணக்கில்
ஒன்றை சேர்த்துக் கொள்கின்றேன்!
நான் இரவாமலேயே எனக்கு
இதயம் கொடுத்த நீயும் வள்ளல்தானே...!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=957908266801&id=3e3bf0608889f7390baf960f3d954b53
இருப்பினும்
உன் இணக்கம் வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க - இந்த
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை.....!!!

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

/உனது நேசத்தின் நெருக்கத்தில்
அமைதியாகும் என் சோகங்கள்!
என் காதலின் பயணத்தில்
ஓய்வு என்பதே கிடையாது!//

உண்மைதான்....

அழகான வரிகள்...

பிரேமி said...

நன்றி சங்கவி....கவியுடன் இணைந்திருங்கள் :-)