Sunday, June 19, 2011

ஒற்றைச் சுவராய்......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS7Giz7tJg7LYrPlUQ3_ZM843Gx4rmGeXRrZiqvABOQcjitqpcM
காதலின் ஊடலில்
செந்தனலாய் வார்த்தைகளை
நீ
வீசினாலும்
பொறுமையின் பாரத்தை
சுமத்தியதும் நீயல்லவா....


நீ
பயணிக்கும்போது
கடந்து செல்லும்
ஒற்றை மரத்தின்
நிழல்ல நான்...
உன்
பாதச் சுவடுகளின்
வழியே தொடரும்
உனக்கான ஈர நிழல் .....
http://www.desicomments.com/dc1/07/127160/127160.gif
என் நிலைப்பாட்டை
நீ
அறிகிறாயோ இல்லையோ
உன்
காலம் அறியும்!


விதி முடியும் முன்பு
மலரத் துடிக்கும்
என் கனவினை அள்ளி
உன் காலடியில் விரிக்கின்றேன்..
http://www.desicomments.com/dc1/07/127162/127162.gif
தூசு படிந்த இலையாய்
என்னுள் படிந்த
உன் நினைவுகளை
துடைத்து எடுக்க துணிந்ததில்லை
....


சுகத்தோடு வாழ்ந்த எனக்கு
இன்று
என் அகத்திற்கும் ஆபத்தாம்...
மன பாரம் ஏறி ஏறி
உடல் பாரம் குறைந்து விட்டது..

உன்னிடம் உரையாடமல் இருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் உணர்வுகளும் மெல்லமாய்
சாகடிக்கப் படுகின்றன...
http://www.desicomments.com/dc1/07/127164/127164.jpg
உறவைக் கொடுத்து
உயிரைப் பறிக்கும் வார்த்தைகளை
நீ கற்ற இடம்தான் எது...?

பகட்டாய் வாழ்ந்திருந்தவள்
இப்போது
பயணத்தின் வழியே பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவராய் நிற்கின்றேன் - உன்
நேசத்தின் மாறுதலுக்கப்புறம்...

http://www.tamilun.com/upload-files/raj/east/dsc00050_800x600-w600.jpg

2 comments:

ஷர்புதீன் said...

finally you too come and joined in TAMILMANAM

:-)

wishes!

பிரேமி said...

எனக்கு அது தெரியாதே...:-(