Tuesday, June 14, 2011

என்னவனே...வருவாயா?



http://mixphotos.files.wordpress.com/2008/12/oceanic-lovers-jim-warren.jpg
அருகிலிருந்தும் அந்நியமாகும்
உறவுகளுக்கு மத்தியில்
அன்பின் ஆதவனாய் .... என்னவன்

இரத்த நாளங்களில்
எத்தனையோ ரணகளங்கள்
வருடிச் செல்லும்
மயிலிறகாய் .... என்னவன்

நித்தம் நித்தம் நினைவுகளில்
சிக்கித் தவிக்கும் நிலையில்
கை கொடுக்கும் தேவனாய் .... என்னவன்

தேடல்கள் யாவும் என்னை
தீண்டாமலே போகும் பொழுது
புதையல் பொக்கிஷமாய்...என்னவன்

நெருஞ்சி முள்ளாய் வாழ்க்கைப் பயணம்
வழிகாட்டும் வானவில்லின்
நந்தவனமாய் .... என்னவன்

அங்கத்தில் இடம்பிடித்தவனே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKoAL1nOWDIjOBlFZG6VaLeLvnLgweuStWaMMXCIyB_wdqp7bc4QiFAC36Y35CJYe73_d9tnIJyPi2Vw8rJ5Djsf0_RW4GcSM7KWFfBzrVQOlAXq6QSjnZluGeVvKSHiG0WGZ_2VnK1U/s1600/The-Lovers-1024x768-bandwidth-thiefA.jpg
விடியும் வரை உன் மார்பில்
நான் கண் துயில வேண்டும்
விடிந்தபின்னும் என் உறக்கம்
கலையாமல் பாதுகாக்க வேண்டும்

உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?
__._,_.___


3 comments:

அன்புடன் நான் said...

காதல் உருகும் கவிதைக்கு பாராட்டுக்கள்.

//Word verification // இத எடுத்திடுங்க.

பிரேமி said...

நன்றி சி. கருணாகரசு. தொடர்ந்து கவிதையுடன் இணைந்திருங்கள்...

பிரேமி said...

நல்ல தகவல். நன்றி நண்பரே...