Tuesday, June 21, 2011

மருந்திடுவார் யாரோ?

இதோ
இந்த இருண்ட வானத்தின்
வாசற்படியில் வலுவிழந்து நிற்கின்றேன்...
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQkQ9C_fV0N2E-gJ2Sl4cpxyUd_mh5IZkoDLKBMO7WVeLuECXYH
எங்கே நான் விழுவது?
என் கரங்களின் ரேகையை
என் விதி அழித்துவிட்டது!

வாழ்க்கை என்னும் கடலில்
பயணிக்கும் போது
துடுப்புகளே தொலைந்து போனால்
தூண்டிலை வைத்து என்ன செய்வது?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Y1SdCrRRg3YRxK0F7kmp7zc21C0RfYat2sVB3z_vqHJiihuCZV4uL2Ta9opMweIZomCqEHN5wlxCpcyPwJDEuxrinR0mdIGU_bH9zQj_mXTyKLhHpdDQIXa_dztlDDZxaYNL-BFwfQSB/s400/Row+Boat+and+River.png
ஏமாறுதலின் ஏகாதிபத்தியமே
என்னிடம்தான் உள்ளது...
இருந்தும்
சாயம் பூசிய வண்ணக் கோழிக்குஞ்சாய்
வலம் வருகின்றேன் வீழ்வதறிந்தும்...!!
http://ts3.mm.bing.net/images/thumbnail.aspx?q=1012895327994&id=f528d43307f314c5fc5a1799c31a1cdc
என்னைத் தொடர்ந்து வந்த
என் பாதங்கள்
இப்போது என் பயணிப்பை
தனித்து விட்டுச் செல்கின்றன....

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்த
பூச்செடி
இப்போதெல்லாம்
கள்ளி செடியாகவே தெரிகிறது!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSECEMqtV4CogYp1ftPHIrl8v86JB0vKIcxTYrprCdyJr2Q_M2Oow
இதயம் முழுதும்
பாறையாகி விட்டதால்
விதைக்கும் விதைகளும்
வீரியமற்றே கிடக்கின்றன....

காலங்களை பிடித்திழுக்கும்
இந்த காயங்களில் மருந்திடுவார் யாரோ?
அந்தி சரிகின்ற போதெல்லாம்
என் புலம்பல்கள் புலம்பெயர
ஆரம்பிக்கின்றன....
http://i5.photobucket.com/albums/y175/nilavunanban/Love_Pain.jpg
விழிகள் விரிய விசாரிக்கின்றேன்
விருப்பத்தின் வாசலில் விளிக்கின்றேன்
விரையும் வினாடிகளிலும்
விதியோடு விளையாடுகின்றேன்...




2 comments:

sathishsangkavi.blogspot.com said...

//காலங்களை பிடித்திழுக்கும்
இந்த காயங்களில் மருந்திடுவார் யாரோ?
அந்தி சரிகின்ற போதெல்லாம்
என் புலம்பல்கள் புலம்பெயர
ஆரம்பிக்கின்றன....//

அற்புதமான வரிகள்...

பிரேமி said...

மிக்க நன்றி.....சங்கவி! என் கவியுடனும் இணைந்திருங்கள்...:-)