Friday, December 17, 2010

அறிதலும் புரிதலுமாய்....

http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs1140.snc4/148231_131111070284088_100001555869268_180096_6639433_n.jpg



விண்மீன்கள் விட்டுச்சென்ற விடியல்

விழிகளோ நெருப்புக் குளியலாய்...

நெஞ்சமோ தணலாகி தவிப்பாய்...

அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்


உரையாடலால் உலா வரும் _ நம்

குரல்கள் தென்றலாய் தேசமெங்கும்

கதைப்பதற்கு அவசியமான செயல்கள்

ஏதுமில்லை...ஆன போதும் கேட்பாரற்று

சலனமின்றி கிடக்கும் எனது இனிய

அலைபேசியும் வருத்தத்தில் முழுவதுமாய்

உனக்கும் எனக்கும் இடையிலான

வெற்றிடத்தை சொல்லி விம்முகிறது....


அறிதலும் புரிதலுமாய் நம்முள் காதல்

உணர்வு பரிமாற்றங்கள் மென்மையாய்

வரம்பு மீறா வார்த்தைகளுடன் _ உன்

தெரிவிக்கமுடியாத ஏக்கத்தை

நமக்குள் நடக்கும் ரகசிய யுத்தத்தில்

சத்தமின்றி _ நீ _ இட்டுச் சென்ற

முத்தமும் என்னுள் மொத்தமாய்....

2 comments:

S.V.Sai baba said...

கவிதைகள் எல்லாம் அருமையாகவும், இனிமையாகவும் உள்ளன . பாராட்டுக்கள்

பிரேமி said...

ரசித்தமைக்கு நன்றி.
தோழமையுடன் இணைந்திருங்கள்..:-)