Wednesday, December 15, 2010

என் காதலின் கவிதை

http://s2.hubimg.com/u/43157_f520.jpg




என் காதலின் கவிதையை
விரல் கொண்டு எழுதுவதால்
வீணாகப் போகுமென்று - என்
விழி இமைகளின் விளிம்பில்
மையிட்டு எழுதுகிறேன்...

என் காதலின் கவிதையை
அதரம் கொண்டு எழுதுவதால்
அழிந்து போகுமென்று - என்
உதிரத்தின் வாயிலாக
உறைய எழுதிகிறேன்...

அன்பே...
அக்கரையிலிருந்தும்
ஆள்கிறாய் என்னை
நானோ
நெடுந்தூர வானமாய்
தொடர்கின்றேன் உன்னை...

வெற்றிடமாய் இருந்த
இதயமோ நீ
வந்து தங்கியதால்
நந்தவனமானது!

அனுமதியின்றி உள்ளே
நுழைந்த உன்னை எந்த
சட்டத்தின் கீழ் தண்டிப்பது?
விசாரணையின்றி உனை - என்
விழிகளுக்குள் சிறை
வைக்கின்றேன்....

கண்களுக்குள் கவிபாடும்
கண்ணாளனே...
உன் மேல் கொண்ட மோகத்தால்
நான் கொண்டேன் மௌனம்...
உயிராய் உணர்வாய் உன்னுள்
எப்போது நான் வருவேன்?

வாழ்வென்பது உன்னோடுதான்
அதுவரை நான் பண்போடுதான்
உறவென்பது உன் உயிரோடுதான்
அதுவரை நான் உன் நினைவோடுதான்.....

No comments: