Tuesday, December 28, 2010

நீயும் நானும்....






http://de.trinixy.ru/pics2/20071023/podb/9/love_11.jpg




இணையம் தந்த இணையில்லா
இலக்கணச் சுடரே....
உயிரின் ஓசையில் என்னுள்ளே
இசையாய் பரிணமித்தாய் - உன்
முகம் காணா காதலில் - என்
அகத்திரை கிழித்து ஐக்கியமானாய்...

தடுமாறும் மனதை தகர்த்தெறிந்து
தைரியம் கொடுத்த தடாகம் நீ...
எனக்காக நீ வரைந்த பாடல்களில்
உன் ஜீவனை காண்கின்றேன்...

கரங்கள் இறுக்கி நாம்
கவிதை பாடவில்லை...
உடல் உரசி உஷ்ணம் கிளப்பி - நாம்
கண்ணியத்தை கறைக்கவில்லை
கட்டி அணைத்து காதல்
செய்ய வேண்டும் என்று
அவசியம் கருதவில்லை


இறுக்கித்தழுவி இதழ்கள் வருடி - நாம்
இணைந்து இருக்கவில்லை...
ஒருமுறை கூட நாம் சந்தித்து
சரித்திரம் பேசவில்லை - ஆனாலும்
நாமும் இதயம் யாசித்து நேசிக்கின்றோம்...

காற்றோடு மட்டுமே நாம்
பாஷைகளை பரிமாருகின்றோம்...
நிஜத்தை மட்டும் நாம்
நிறைவாக நேசிப்பதால் - நம்
நிழற்படத்தை இருவருமே
விரும்பவில்லை...


வானத்தைப் பார்த்து ஏங்கும்
பூமியாய் மனம் இருந்தாலும்
செழிப்போடு இருப்பதாகவே
சிரித்து நாடகமாடுகின்றோம்...

நீ நினைப்பதை நான் சொல்வதால்

"அடியே என் பிம்பம் நீயடி" - என்று
சொல்லி குதூகளிப்பாய்... - உன்
மகிழ்வை சத்தமின்றி நானும்
ரசித்து அகமகிழ்வேன்...

உணர்வுள்ள விஷயங்கள்
உயிரூட்டமாய் ஒத்துப்போவதில்
இருவருக்குமே எல்லையில்லா
பெருமிதம்! இருந்தபோதும்....

இருவரும் இணைந்து
வசந்தமான வாழ்க்கை வாழ
ஆசைப்படுகின்றோம்...- உறவுச்
சிக்கலில் இணைந்து கிடப்பதால்
விதிவழியே நிற்கின்றோம்
வழி தெரியாமல்....வலியோடு...

உறவிற்கு உயிரூட்ட முடியாமல்
தொலைத்த இதயத்தை
மீட்க முடியாமல் தடுமாறி
உயிர் வதை படுகின்றோம்...
ராப்பகலாய் பேசித் தீர்க்கின்றோம்
தீர்வுதெரியாமல் விழிக்கின்றோம்

கனவுகள் கலைந்தாலும்
நினைவுகளோடு வாழ
தயாராகி தண்ணீர்குடித்து
தாகம் தீர்க்கின்றோம்...

காதல் செய்ததில் - விட்டுக்
கொடுத்து வாழப் பழகினோம்!
பழக்கம் இங்கு கைகொடுத்தது...
பார்க்காமல் பிரிகின்றோம்
உயிர் கொடுத்த உறவுகளுக்காக!!

என்னை நீ விட்டுக் கொடுத்து
விலகி விதியை சபித்து
நிற்கின்றாய்...
உன்னை நான் விட்டுக் கொடுத்து
விலகி விழிநீரோடு
நிற்கின்றேன்...

ஆனால்
நம் காதலை யாருக்காகவும்
விட்டுக் கொடுக்க இருவருமே
இசையவில்லை...
எங்கிருந்தாலும் நம்
காதல் கலங்கமில்லமால்
வாழ்ந்து கொண்டிருக்கும்
என்ற நம்பிக்கையில்
நீயும் நானும்.....

1 comment:

S.V.Sai baba said...

அருமையான கவிதை. கவிதைக்கேற்ற வண்ணப்படம்.வாழ்த்துக்கள்