Tuesday, September 22, 2015

துளிப்பாக்கள்....





இணையாமல் காத்திருக்கின்றன
இமைகள் இரண்டும் - உன்
ஒற்றை முத்தத்தில்
இணைவதற்காய்....!

வெளுத்துப்போன வாழ்க்கை
எப்போதும் ஒப்பனையில்
விலைமாதர்கள்...!

சுடும் வெப்பத்திலும்
குளிர் அரங்கேறுகிறது
அலைபேசியில் நீ...!

நாட்குறிப்பின் இடையில்
நீ கொடுத்த மயிலிறகு!
இனவிருத்தி செய்யாத
இறகுகளுக்கிடையே - உன்
நினைவுகள் விருத்தியாய்....!!

No comments: