Tuesday, September 22, 2015

பொக்கிச நினைவுகள்....



            
                 


இதயச்சுமைகளை
பேனா முனையில்
இறக்கி வைக்கும்போதெல்லாம்
எதிரே வந்து விடுகின்றாய்...

உன்னால்
இரணமான இதயத்தை
ஆற்ற ஆயத்தமாகி விடுகின்றாய்...

என் தவிப்பும் தவமும்
உணர்ந்த நீ வரைகின்றாய்
எனக்காய் ஓர்
எதிர்க்கவிதை...!

முறிந்து கிடந்த சிறகுகள்
மீண்டும் உயிர்ப்பெற
யார் சொன்னாலும்
கேட்காத பெண் மனம்
நீ இரந்தால் மட்டும்
இறவாமல் பச்சையாகிறது...

எப்போதும் என் இதயக்கூட்டினுள்
தென்றலாய் உன் நினைவுகள்
தீண்டித் தீண்டி இளைப்பாருகின்றன…

மடிப்புச்சேலையின் நூலோடும்
துடிக்கும் இதயத்தின் நரம்போடும்
உன் தீண்டல்கள் பூபாளமிசைக்கின்றன…

என் ஞாபகச்சிறகுகள் எங்கும்
உன் நேசத்தின் வண்ணங்கள்
பூக்களாய் மலர்ந்து சிரிக்கின்றன….

வேரில் ஈரமிருந்தால்
விதைக்கு சோரமில்லை – உன்
இதயத்தினுள் ஈரமிருந்தால்
என் விழிக்கு ரோகமில்லை...

ஆதலால்தான் - அன்பே
புரிந்த உறவினுள்
புதைந்து கிடக்கிறது – உன்
பொக்கிச நினைவுகள் புதையலாய்…

No comments: