Saturday, August 20, 2011

காதல் வெல்லுமா

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSU5O0ZhPo81T80HW7l9vdfKtfb64KhFn8qnAYq5NJyxG9O12ZX

கண்ணை மட்டும்
கசக்கத் தெரிகிறது
காதலை சொல்லத்
தெரியவில்லை
கண்ணீர் மட்டும்
காரமாய்க் கரிக்கிறது
காயங்களை ஆற்றத்
தெரியவில்லை

கற்றுக்கொண்ட வார்த்தைகள்
கவனமாய் வெளியேறியும்
கனத்துப்போன இதயமோ
காதலை சேமித்து வைக்கிறது
கடந்து போன நினைவுகளோ
கவிதைகளோடு போரிடுகிறது
http://th08.deviantart.net/fs29/300W/i/2009/067/6/5/Bloody_Field_by_SadGirl311.jpg
குறையாத நேசிப்போடு
குவிந்த புன்னகையில்
கலைந்து போன கனவுகளோ
கண் முன்னே கண்ணாடியாகிறது
காட்சிகள் யாவும் கலைக்கப்பட
கலவரம் சூழ்கிறது நெஞ்சுக்குள்ளே

கசக்கி எறியப்பட்ட காகிதமாய்
கவலைகள் கடைந்தெடுக்க
காதலின் வலி மிகுந்த காலங்களை
காரணத்தோடு மறைக்கின்றேன்
கன்னக்குழியில் விழுந்த கண்ணீரை
காற்றோடு கறைக்கின்
றேன்
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSn6HgRvLPj6npTmd1Gqkv4ON_dQH6hq0XlaXbdNWhC5vCAWhyx
காலத்தின் மௌனத்தை
காதல் வெல்லுமா
காத்திருத்தலின் நேரத்தை
காயங்கள் சொல்லுமா
கோலத்தின் தனிமையில்
கொண்டதெல்லாம் வரமே...




2 comments:

Unknown said...

//காலத்தின் மௌனத்தை
காதல் வெல்லுமா
காத்திருத்தலின் நேரத்தை
காயங்கள் சொல்லுமா//
VERY NICE!

பிரேமி said...

நன்றி. தொடர்ந்து கவிதையுடன் இணைந்திருங்கள்...:-)