Wednesday, August 31, 2011

சிக்குண்டு கிடக்கும் சின்ன இதயம்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEik4YXEJ4PAoIfXEAPlPYuv4Sh7TwSXsxirqhuv2QijFJ2UGTA_V9uVKwpRbXubX54QbEIGxu8pCisNNp_CfaMppSp3tYy3odPkSN87HcfO7PRGcqubbx6RQnKPI_A64eTEfrQi9kGxRz53/s1600/Love%2520photos%2520(5).jpg

காதலனே.....
காத்திருந்தேன் உன் காதலின்
வலிமையை வாய்மொழியாய் - நீ
என்னிடத்தில் பறைசாற்ற...


உறக்கமற்ற இரவில்
உரிமையாய் அழைத்தாய்....
செல்லமே...
தேகம் சிலிர்க்க நிமிர்ந்தேன்
தேக்கிவைத்த கண்ணீர் - உன்
விரல்பட்டு சிதறிவிழ...

மெல்லமாய் இழுத்து
இதமாய் அரவணைத்து
காதுகளின் ஓரத்தில் - உன்
சுவாசத்தை இயக்கி.....
உன் ஸ்பரிசத்தை என்னவென்று
சொல்லி மாய்வது?

சொல்லமுடியா சோகத்தில் - நான்
சோர்ந்து போய் நிற்கும்போதெல்லாம்
எனை சுகப்படுத்தி பார்ப்பதையே
வாடிக்கையாக்கி சுகப்படும் - உன்
சின்ன இதயம் இன்று என்னிடம்
சிக்குண்டு கிடக்கிறது....

ஜென்ம ஜென்மாய் தேக்கிய
ஏக்கங்கள் இன்று - உன்
பார்வையின் பயனால்
தீர்ந்து சரிகின்றது....

என் கண்ணில் மட்டும் நீ
கலந்துறவாடவில்லை...
என் ஆத்மாவினிலும்
ஐக்கியமானவன்...


இது
நீ எனக்குத் தந்த வரமா?
இல்லை
காலம் உனக்குத் தந்த சாபமா?

என் இதயமும், விழிகளும்
மூடித் திறக்கும் நேரத்தில்
எல்லாம் இனி நீ நிற்பாய்
என்ற நம்பிக்கையில் - உன்
தோள் சாய்கின்றேன்

2 comments:

காந்தி பனங்கூர் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

kaviarunaa said...

தோழி,
உங்கள் கவிதை ஆர்வம் கண்டு மிக்க மகிழ்ச்சி.
வளரி என்கிற கவிதை இதழ் ஒன்றினை
நடத்தி வருகிறேன்.
உங்கள் மின் அஞ்சல் முகவரி தந்தால் அனுப்பி வைக்கிறேன்.
என் மின் அஞ்சல் :
valari2009@gmail.com
-அன்புடன்
அருணாசுந்தரராசன்