Monday, January 31, 2011

ஒப்பில்லா மன்னவனே!

http://www.myorkutglitter.com/wp-content/uploads/2009/03/love-hurts.gif




வசந்தமற்ற வாழ்க்கையில்
வசந்தமாய் வந்தவனே....
உன்
நேசத்தினால், செத்தவள்
மீண்டும் உயிர்த்தெழுகின்றேன்....

சுற்றங்கள் எனை சூழ்ந்திருந்தாலும் - அவை
மற்றவையாகத்தான் தெரிகின்றன..!
சுற்றமே நீதான் என நெஞ்சமும்
சுகப்பட்டு சொல்கின்றது...


அடியார்க்கு பணியாத
எனது உள்ளமும் - உன்
பார்வைக்கு பணிந்து
கிடப்பது எப்படி?

வாழ்ந்தேனே கனவின்றி
முந்நாள்....
வந்தாயே கனவாக
இந்நாள்....

குளிர்ந்தேனே இரவோடு
சுகமாய்....
இணைந்தேனே உறவோடு
உயிராய்....

எந்நாளும் மாறாது
என் எண்ணம் - யார்
சொன்னாலும் போகாது
உன் வண்ணம்...

யாரோடு நீ கொஞ்சிப்
போனாலும்
பாரோடு உன் வழியில்
பயணிப்பேன்...

நிஜம் வேண்டாமென்று
நீ தள்ளிச் சென்றாலும்
நிழலாய் உன் பெயர் சொல்லி
உன்னவள் நானே - என்று
உரக்கக் கூவுவேன்...

ஒப்பில்லா மன்னவனே!
உப்பில்லா உணவும்
உன் கரம் பட்டால் சுவையாகும்..!
பண்புள்ள இந்த பாவையும்
உன் பக்கத்தில் வந்தால் பாக்கியமாகும்...!

2 comments:

explore said...

Nice post. Thank you for commenting my blog

http://explorewithjoy.blogspot.com/2009/10/chief-ministers-of-tamil-nadu-since.html

பிரேமி said...

நன்றி நண்பரே....கவிதையுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்:-))