Wednesday, February 16, 2011

எங்ஙனம் எரிவேன்....?







http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ_Uwfsj-qd4ezuE4mWQg7w6krQnz5sgCg9G8skR73ndPzs-CPfrg

அன்பே...

தேன் சிந்தும் சோலையில்
தெம்மாங்கு பாடும் மாலையில்
உன் பார்வையில்
ஆயிரம் சந்தங்கள்!
பார்த்த எனக்கோ
பல்லாயிரம் சரணங்கள்!

புத்தருக்கு ஓர் போதிமரம்
எனக்கோ நீயோர் ஜீவனுரம்!
உன் வாசகம் பார்த்த
நான் யாசகம் கேட்கின்றேன்!

உனை
எண்ணி நான் எழுதும்
எழுத்தெல்லாம்
என்னவனே உந்தன் சேதி
சொல்லாதோ! - உனை
எண்ணி இருக்கின்ற
கன்னி முகம் பார்க்க
கரைதாண்டி வரமாட்டாயா??

பூமியைத் தேடி வரும்
மழை நீருக்கு
பூமி ஒரு போதும் தடை
செய்ததில்லை! - எனை
நீ வந்தடைய எந்த
இடையூறும் இல்லையடா!

நகரத் தவிக்கும்
என் நேரங்களும் - நீ
என்னில் வந்து சேரும்வரை
அவைகளும் என்னோடு
சேர்ந்து அழுது தீர்க்கின்றன...

எனக்கான அங்குசம் நீ...
வாழ்க்கைப் பாகனாய் - எனை
வழிநடத்திச் செல்!
வஞ்சமில்லாத எந்தன்
நெஞ்சத்தில் வந்து போகும்
வழிப்போக்கன் அல்ல நீ..!

எதுவாக இருந்தாலும்
உனை மீற முடியாத
சுதந்திரம் எனக்கு எதற்கு?

எரிய இருக்கும் உடம்பினில்
ஒரு பாகமாய் இதயம் என்ற
உயிர் மூச்சாய் நீ இருக்கையில்
நான்
எங்ஙனம் எரிவேன்....?

தினம்தோறும் இரவில்
தாயாய் தாலாட்டிட - உன்
மடியிலே கண்துயில
வரம் கேட்டு உன் வாசற்படிவந்து
நிற்கின்றேன் வரம் தருவாய் என்ற
நம்பிக்கையில்......



2 comments:

Welcome Designers said...

kavithaiku oru kadhal endral athu un kavithaithan

பிரேமி said...

Romba Nandri:-)