Friday, May 8, 2020

எம் இல்லத்து பூந்தளிர்கள்

எம் இல்லத்து பூந்தளிர்கள்
********************************
உள்ளமொன்றும் புறமொன்றும்
பாராமல்
வெள்ளையுடை தரித்து வலம் வரும்
வெண் தேவதைகள்!
செவிலியர் என்றாலே சேதாரமானவள்
என்ற வார்த்தையை வெட்டியெறிந்த
எங்கள் தேசத்தின்
எல்லை அம்மன்கள்!
துயரோடு வாழ்ந்தாலும்
அந்நியர் உயிரோடு போராடும்
உயிரோவியக் காவியங்கள்!
பரமக்குடி மாநகரில்
ஆறு புஷ்பங்களாய் மலர்ந்த
எங்கள் இல்லத்தில் செவிலியராய் 
முப்பெருந்தேவியராய் நிற்கின்றனர் மூவர்!
பயணச்சேவை முடியவில்லை...
வாரிசுகளும் மருத்துவச்சியாய்... செவிலியராய்..
இவர்களின் இரத்த பந்தமாய்
இருப்பதில் பெருமையோடு
கர்வமும் கூடுதலாய்... 👍   

No comments: