Saturday, November 30, 2013

உன்னைத் தவிர்ப்பதில்லை.....




எழுத்துக்களால் நடனம்புரியும்
என் வார்த்தைகளுக்கிடையில்
உன் மௌனமொழி கண்டு
முடங்கித்தான் போனேன்...

தினமும் ஒருமுறையாவது
உன் விழிகள் என்னை
விசாரிக்காமல் போனால்
என் விதியை விமர்சிக்கின்றேன்...

இந்த இதய இயந்திரம்
உன்னால் மட்டும் இயக்கப்படுவதால்
என் மனக்குதிரையும் உன் முன்னே
மண்டியிட்டுக் கொள்கிறது...!

எப்போதும் உன் நினைவுச் சுவடுகளை
சுமந்து கொண்டிருப்பதால்
தப்பாமல் ஒலிக்கும் இதயமும்
உன் பெயரையே உச்சரித்து உயிர்தருகிறது!

ஆனாலும் எதிர்பாராத தருணங்களில்
எதிர்பாராமல் எது நடந்தாலும் - ஒருபோதும்
காகிதப்பூவிற்கு நீர்வார்த்து
மூலிகைச்செடியை மிதிப்பதில்லை அன்பே...

2 comments:

தனிமரம் said...

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.

பிரேமி said...

நன்றி தோழமையே. தொடர்ந்து காலாற்றுப்படையுடன் இணைந்திருங்கள்...