Wednesday, March 9, 2011

ஆணிவேரானவன் நீ!



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYtck4qTWZL1N2VqcWQT8uCoPTE8xz9ysOJ61gbvfjuv0-phaVGMZQ7ImdgbS6p0VTtBhcT1lZkAje5HW4fd_jWXtQ2_heEJkdJ2FV5FyVL53WAf2qkT2i5IfoipmE9cEyPYXs3vduVHGc/s320/sad.jpg



செல்லமே....
இரவுப் பொழுது மெல்லமாய்
இறக்கின்றது....ஆனால்
என் இரவு மட்டும் எப்போதும்
வெளிச்சமாகவே இருக்கின்றது!

இயலாமையிலேயே
இதயமும் கிடப்பதால்
எனது காகிதப்பேடும்
வெற்றிடமாகவே கிடக்கிறது...

உன் ஞாபக சின்னங்கள்
நெஞ்சோடு சிதறிக்கிடப்பதால்
என் கண்ணீரின் தூறலில்
கரைந்தே போகின்றேன்...

உன் முகம் மட்டுமல்ல
நீ விடும் மூச்சுக்காற்றும்
எனக்கு ராசிதான் - அதையே
நான் சுவாசிப்பதால்...

என் குலசாமிக்கும் உனக்கும்
ரொம்ப வித்தியாசமில்லையடா
நான் உன்னைக் கேட்டு
கையேந்தினால் சாமியும்
உன்னைப்போலவே எப்போதும்
கல்லாகவே நிற்கின்றது....

நீயோ
எனை காக்க வைத்து
களிப்டைகின்றாய்...
நானோ காத்திருந்து
காயமடைகின்றேன்...
என் தேசம் மட்டுமல்ல
என் நேசமும் தப்பானதல்ல!!

உனக்காய்
காத்திருக்கையில்
நான் காணாமலே ஆகலாம்
ஆதலால் அன்பே - நான்
மறையுமுன் வந்துவிடு
என் சாம்பலையாவது
தொட்டுவிட்டுப் போ
எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்

நேற்றைய நினைவிலும்
நாளைய கனவிலும்
காலத்தை கழிக்கின்றேன்
என் எண்ணத்தின்
ஆணிவேரானவன் நீ!

என் ஆவியை உன்னிடம்
தொலைத்ததால் பார்ப்பவர்களுக்கு
நான் பாவியானேன்!

தொலைதூர இடத்தில் நீ

இருந்தாலும்
தொலையாத நினைவுகளுடன்
உன்னை தொடர்கின்றேன்

எனை நினைக்க மறந்து
நீ பறந்தாய்!
நினைத்தே இருப்பதால்
நான் இறந்தேன்.....

1 comment:

வித்யாசன் said...

உனக்காய்
காத்திருக்கையில்
நான் காணாமலே ஆகலாம்
ஆதலால் அன்பே - நான்
மறையுமுன் வந்துவிடு
என் சாம்பலையாவது
தொட்டுவிட்டுப் போ
எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்

இந்த வரி உணர்வின் சுகம்.
ஏக்கத்தின் உயரம்
ரசிக்க இரவுகள் காத்திருக்கிறது.