Saturday, January 5, 2013

காதல் கீதம்....


முகில் கண்டு நடமாடும்
மயில் போல - உன்
விழி கண்டு மலராடும்
என் மென்மை....

இருளோடு இணைந்தாடும்
மதி போல - உன்
அருளோடு வழிந்தோடும்
என் கண்கள்...

ஒளியோடு சுழன்றாடும்
கதிர் போல - உன்
ஒலியோடு சதிராடும்
என் சலங்கை...

மழையோடு நனைந்தாடும்
நிலம் போல - உன்
இழையோடு நுழைந்தாடும்
என் தேகம்...

பனியோடு நிறைந்தாடும்
இலை போல - உன்
கவியோடு மலர்ந்தாடும்
என் சோலை...

பொருளோடு கலந்தாடும்
கவி போல - உன்
கருவோடு உறவாடும்
என் பெண்மை....

No comments: