Monday, June 4, 2012

ஆத்மார்த்த  சிநேகிதனே .......
 
தண்ணீரின்  தழும்பல்கள்
விழிகளில்...
வெப்பத்தின் விழுதுகள்
இதயத்தில்....
ஈரத்தின் போக்குகள்
கன்னங்களில்...
இழப்பின் ஆக்கங்கள்
உச்சத்தில்....
அச்சங்கள் எச்சமாக
மிச்சமிருப்பது என்னவோ
மச்சமான வலிகளின் பொழுதுகள்.....!!
வீறுநடைபோடும் விதியின் 
வலிமையை கிலியோடு கவனித்திருக்க
வார்த்தைகளில் வசப்படுத்துவாய்
வாஞ்சையாய் தலை கோதுவாய்
வஞ்சனையில்லாமல் 
இதயச்சுமை ஏற்பாய்!
துக்கம் மறந்து
இளைப்பாருகின்ற
தாய் மடியாய்
தாங்கிப்பிடிப்பாய்
முழுமையாய் அங்கீகரித்து
அன்பிற்குள் அரவணைப்பாய்....
நீயிருக்கும் தைரியத்தில்
கண்ணீரும் கரைமீறத் தயங்கும்!
ஆத்மார்த்த சிநேகிதமாய்
உன்னைவிட வேறென்ன
வேண்டியிருக்கு...!!

No comments: