Tuesday, November 29, 2011

உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/313561_248546288540565_100001555869268_672078_458079142_n.jpg
கதவோரம் கதவாய்
நின்று கொண்டிருக்கும் - என்
இனிய செல்லத்திற்கு....

சேகரித்து வைக்கின்றேன்
கனவுகளை பொக்கிசமாக....
இறந்து போன நிமிடங்களை
இயக்கிப் பார்க்கும்
இதயத்து நினைவுகள்....
இரவின் பிடியினில்
இலவசமாய் தாரை வார்க்கும்
பனித்துளிகளின் மத்தியில்
உனக்கு
உயிரோட்டமாய் ஓர் கடிதம்...

உடல் நலம் எப்படி? - இங்கு
அது நல்லபடி.....
மன நலம் எப்படி? - இங்கு
அது உன் வசப்படி....
விரைவில் உன்னிடம்
நான்....
வந்தபின் நம் செயல்பாடுகள்
இப்படியே.....

காற்றுக்குள் ரகசியமாய்
காதல்கதை பேசிடுவோம்
கவலைகளைத் தொலைத்துவிட்டு
கனவுகளை விதைத்திடுவோம்
பொன்தமிழில் பாடிடுவோம்
பூமியெங்கும் வலம் வருவோம்

வரவொன்றும் செலவொன்றும்
வகை வகையா செய்திடுவோம்
வயசோட கனவுகளை
வரமாக செதுக்கிடுவோம்
சுதி வேறு லயம் வேறாய்
சுவரமாக இணைந்திடுவோம்...

மவுனத்தின் மயக்கத்தை
மனசாலே போக்கிடுவோம்
பருவத்தின் தோட்டத்திலே
பல கலைகள் விளைச்சிடுவோம்
வெட்கங்கள் சூழ்ந்தாலும்
வேலியதை கலைந்திடுவோம்

உருவத்தின் நிழல்களை
உயிராக வளர்த்திடுவோம்
உலகத்தின் பார்வையினில்
உணர்வுகளை செதுக்கிடுவோம்
பழங்காதல் பெருமைகளில்
புதுவாழ்வைக் கண்டிடுவோம்


No comments: