Saturday, July 30, 2011

உன் புன்னகைப் பூக்கள்....

எங்கும்
சிதறிக் கிடக்கிறது
உன் புன்னகைப் பூக்கள்....

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7XOlMhKRfJdvHRcgg4SUwFdAEoGSDIMf_tH1feP3-uVFUgqAJ
உயிர் எங்கும்
ஒட்டிக் கிடக்கிறது
உன் காதலின் கவிகள்...


ஆன்மாவின் அடிவரை பாயும்
அந்த வாக்கியங்களில்
என் பிறப்பின் நேரம்
பாக்கியமடைக்கின்றது...

http://www.vaarppu.com/2005/p/pookkal_nikath_jul05.jpg
அடிக்கடி ஞாபகத்திற்கு வரும்
உன் புன்னகை முகத்தில்
என் முகத்தைத் தேடியே
தொலைகின்றேன்....

உறக்கத்தின் உச்சியிலும்
தலையணை தவிர்த்து
உன் நினைவுகள் மீதே
தலை சாய்த்து படுக்கின்றேன்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQWOecEKWAfSJbAIH-IXbY-j9_YyC_U7buzoQFOIsiZxcfa7TYTNA
எப்போதோ நீ கொடுத்த
சத்தமில்லா முத்தத்தின்
சுவடுகள் இப்போதும் ஈரமாய்
என் கன்னங்களில் குளிர்கிறது!

உன் காதலில் எல்லாமே
நிறைவாகிப் போகின்றது - உன்
அருகாமையற்ற நேரங்களைத் தவிர...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ8YOdnE11OVE9HpX1I8EyJYwUcx72uxFyq91NU2YFnUlw5IAnr
கவிஞனாய் பல கவிகள்
புனைந்தாலும் - உன்
மௌனமொழிகளுக்கு இதுவரை
ஒரு கவிதையும் என்னால்
ஏட்டில் ஏற்றமுடியவில்லை...!!

நீ ஆசானாய் பாடச்சுமைகளை
சுமக்கின்றாய் - நான்
உன் நினைவுச் சுமைகளை
நித்தமும் சுகமாய் சுமக்கின்றேன்...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQZKCTJEkcbUIlYKcRUQk-Ttj3pDt84C9eKZcHFF4Yhx-EWn2s8
என் எழுத்துக்களில்
எழுதிவிட முடியாத
உன் காதலின் ஆழத்தை
நம் இருவரின் நெருக்கத்தில்
உணர்கின்றேன்...

துளி நம்பிக்கையிலும்
உளி வைத்து செதுக்குகின்றேன்
உன்னோடு பயணிப்பேன் என்று...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0QtNp6EgDez_Au6BX1L5rXKvek9FHdG7G996ZwnbJP2R41ta8
இந்த எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை அளித்தாலும்
நீயில்லாத நீண்ட பொழுதுகளில்
மூர்ச்சையாகிப்போன
என் சுவாசங்கள்
உன் நேசிப்பில் மட்டுமே
உயிர்த்தெழுகின்றன...

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSbKQM8A1maBzHsqwqIJR4IXWuTS9eb0EWU-l4TODjIh1Hw-fgq6w
இதோ இந்த
நினைவுகள் எல்லாம் இப்பொழுது
விழிகொண்டு கண்ணீர்விட
காத்திருக்கின்றன....



7 comments:

ஷர்புதீன் said...

:-)

Mathuran said...

அருமையான கவிதை தோழி
வாழ்த்துக்கள்

Mathuran said...

அருமையான கவிதை தோழி
வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

உன் புன்னகை முகத்தில்
என் முகத்தைத் தேடியே
தொலைகின்றேன்....//

அருமையான படங்களும்
சிற்ப்பான வரிகளூம் அலங்கரித்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இன்றைக்கு என் பதிவில் நீங்கள்தான்.

பிரேமி said...

மிக்க நன்றி.. தொடர்ந்து கவியுடன் இணைந்திருங்கள்...

மாணவன் said...

கவி வரிகள் சூப்பர்.. ரொம்ப நல்லாருக்குங்க வாழ்த்துக்கள்!