Saturday, July 30, 2011

அழகிய நிலா !!!

http://www.hdwallpapers.in/thumbs/end_of_love-t2.jpg
அழகிய நிலா !!!
எப்போது பிறந்தாயோ ?
நிலவோ வளரும் தேயும்
நீயோ
வளர்ந்தே இருக்கிறாய்

எப்போது பூத்தாயோ ?
குறிஞ்சியின் இலக்கணம்
கொஞ்சமும் இல்லை
காதலெனும் நோய் செய்தாய்
கவிதையெனும் பூப்பெய்தாய்
காற்று மகள் வழியாக
கனவுகளை நெய்தாய் -- என்
உயிர் என்ன செய்தாய் ?

சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று
சொல்பவன் கவிஞன் இல்லை
வெல்வதற்கு வைத்திருக்கிறாய்
இதயம் முழுவதும் வெண்மையாய்
புருவம் வில்லாய்....கண்கள் வாளாய் ...
சொற்களும் வாய்மையாய்...
எண்ணங்களும் நேர்மையாய் - உன்
வண்ணங்களும் தூய்மையாய் ...

தென்றலே...
மொத்தத்தில் - நீ
அமைதிக் குளத்தில்
பூத்த அழகிய நிலா !!!

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

காதலெனும் நோய் செய்தாய்
கவிதையெனும் பூப்பெய்தாய்/

அழகுநிலவுக்கு பாராட்டுக்கள்.