Friday, May 6, 2011

விழியும், இதயமும் நீயானாய்...!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcReAhphhEBmVEDf_DyTWZ6klvZhzNeSMR9mNt3q6dwraxJ_aF16
தேவனே....
உன் அறிவிப்பை
எடுத்துச் சொல்லும்
பெரும் காற்று - என்
திசையெங்கும் பரவும்
அப்புறம்!!
நீ வருவதை தென்றலைத்தவிர
வேறு யாரால் மென்மையாய்
சொல்லமுடியும்??

பாசாங்கு அற்ற
பச்சை மனிதனாய்
உன்னைப் பார்த்தமுதல்
எனது
இதயத்திற்கும், விழிகளுக்கும்
ஒரு சின்ன சண்டையானது!
யார்
உன்னை முதலில்
தன்வசம் கொள்வதென்று...
மொத்தத்தில்
என் விழியும், இதயமும்
நீயானாய்...!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQfXJ0IN5vsekPZxioIxcxjXAmItPsZohdnCnaiapqrWrpECHqu-g
புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டி
நிற்பதற்கு முன் தடுமாறுவதுபோல்
புதிதாய் பிறந்த காதலில்
நிற்பதற்கும் தடுமாறித்தான்
போகின்றேன்...
தடுமாறும் என்னை உன் கரங்களுக்குள்
எப்பொழுது அடைக்கலம்
அளிப்பாய்?....?


என் இதய இருட்டறையில்
உனக்கான காதலை
விதைத்துள்ளேன்! - உன்
விழி வழியால் என்னை
ஒளிரச்செய்தால்
விதை விருட்சமாகிவிடும்..!

செய்யும் செயல் எதுவாயினும்

அது உனக்கானதாகிவிட்டது!
அதனால்தான் என்னவோ
மற்றவைகளின் மேல்
பற்றற்ற தன்மையே வருகிறது!
என் உலகப்பார்வையின் கீழ்
நீ ஒருவன் மட்டுமே
தேவனாகின்றாய்....!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQsS0P2HPLkvEMNJn-YP6hq53CMdbbYlbqCTPXgT_ThVLphlHrZ
என் எண்ணத்திற்கென்று
ஏதுமில்லை
எல்லாம் உன் வசமானதால்...
விருப்பு வெறுப்பிற்கு
அப்பாற்பட்டவளானேன்
எல்லாம் உன் பொறுப்பானதால்
என்னில் நீயாய்
உன்னில் நானாய்....
உயிரும், மெய்யும் இணைந்த
காவியமாய்....
என் தமிழ் மொழியாய்...
அழியாக்காதலாய்....
கவிபுனைந்து, காதல் செய்து
இளைப்பாறுவோம்...!!!