Thursday, April 28, 2011

வேண்டுமே.....

மாலை நேரச் சூரியன்
மயங்கிய நேரம்!
கடற்கரையின் காலடியில்
பார்க்குமிடமெல்லாம்
உன் பாதங்களின்
சுவடுகளாய் தெரிகிறது!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்....!!
Join Only-for-tamil
நேற்று சந்தித்த
இறுதிச் சந்திப்பில்
நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம்
இன்னும் காயாமல்...
எப்போதும் காயாமல்
இருக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

என்னை
யார் கடந்து சென்றாலும்
நீ கடந்து போவது
போன்றதொரு சிலிர்ப்பு!!
எப்பொழுதும் நீ
என்னை கடக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!
Join Only-for-tamil
உன் எழுத்துக்களிலும்
என் எண்ணங்களிலும்
வளர்ந்த நமது காதல்
பெரு மழையாய்
பொழிகிறது!
வறண்ட வானிலை
வராமலே இருக்க வேண்டுமே!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

நமது முதல் சந்திப்பில்
என்னிடமே வந்து
என்னை விசாரித்த
உனது சீண்டலை நானும்
என் கரங்களை எடுத்து
உன் மார்போடு சேர்த்து நீயும்
பரவசமடைந்தோம்...!!
பரவசம் பருவந்தோறும்
படர வேண்டுமே...!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்
Join Only-for-tamil
பயணம் இனிதானது
உன்னோடு பயணித்தால்...
வாழ்க்கைப் பயணமும்
உன் ஒருவனோடு இருந்தால்...
பேரிரைச்சல் பெருமமைதி
ஆக வேண்டுமே....
அதுவும் உன் ஒருவனால்
மட்டுமே மாற்றப்படும்...!

4 comments:

ஷர்புதீன் said...

என்னாச்சுங்க., ஆளையே காணோம் ?!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

பேரிரைச்சல்... இன்னிசையாய்... பேரின்பமாய்... என்றும் இதயமென்னும் கடலில்... பேரலையாய்... விளங்கட்டும்...

பிரேமி said...

@ஷர்புதீன்:கொஞ்சம் பணிச்சுமைகள்...அதுதான் காரணம் நண்பரே....விரைவில் தொடர்பு கொள்கின்றேன்.

பிரேமி said...

@தஞ்சை வாசன்: பேரைலை போல் வந்த உங்களது வாழ்த்திற்கு நன்றி நண்பரே...