Thursday, April 28, 2011

உன்னை வெல்வேன்...




கொல்கின்ற தனிமையில்
காலத்தை அளக்கின்றேன்
உறவைக் கொடுத்து
உயிரைப் பிடுங்கும்
உன் வார்த்தையில்
உலகம் மறந்து போனது...
என் காதலின் கண்ணீரில்
கடல் மட்டமும் உயருது!
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQafE9sSE3aUkyXcuOE_7KOM1t6FTwBmdDBxESE1pdvLG-Zseee
மூச்சுக் காற்றாய்
உள்ளே நுழைந்தவனின்
விழிகளின் சந்திப்பில்
விலகலின் வேகம்!

உனக்காகவே உயிர்க்கின்றேன்
உனக்காகவே மரிக்கின்றேன்
என் விதியின்
எண்ணம்தான் என்ன?
விளங்கவில்லை!!!

எங்கேனும் ஒரு தென்றல்
உன்னால் என்னுயிரை
தொட்டுச் செல்லாதா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTsPO5ud-Te40yoKwRwQ-p45rUCJgXuIonqDJYJLK-FimAaxSZY
ஏக்கமாய் எழுதும் எனது
கவிதைகள்
மிதந்து வரும் போது
உன் பார்வையின் பாரம்
பட்டுச் சாகாமலே பறக்கின்றன!

என் இல்லத்தின் விளக்கொளி
மட்டும் நீயல்ல!
என் இதயத்தின்
கர்ப்பக்கிரகமும் நீயே...

உயிருக்குள் உயிராய்
ஊடுருவிய உன்னை
என் உணர்வில் மட்டுமல்ல..
என் உதிரத்திலும் கரைப்பேன்...

சேர்த்து வச்ச ஆசைகள்
எல்லாம் அடைக்கலமாய்
உன் காலடியில் கொட்டுகின்றேன்

புறந்தள்ளி என்னைக் கொல்லும்
உன் உள்ளத்தில் எனக்கோர்
இடம் கொடு இல்லையேல்
கொஞ்சம் விஷம் கொடு..
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQqPo1rsAAaROXt02wgzEOW8YlaUg1dXqTIebamc3zC7fv3ILh79A
கண்ணீரில் கரைந்தாலும்
காலத்தை இழந்தாலும்
காதலில் உன்னை வெல்வேன்...




2 comments:

Unknown said...

Nice prema :)
Im Kick O Kick

பிரேமி said...

நன்றி...காளையாரே....
கவியுடன் இணைந்திருங்கள்...:-)