Thursday, March 24, 2011

விட்டு விட்டுத் தொடர்வதில்....

விட்டு விட்டுத்
தொடர்வதில்
நீயும் என் தந்தையும்
ஒன்றுடா...
என் காதலை
எப்படி விட்டு விட்டு
ஏற்கிறாயோ
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-f6elC2ZK0fNbTtoYX-2k9hW2sYL4yS3BZKqBaT59exZil9zD
அப்படியே
சிறுமியாய் இருக்கும்
காலச் சூழ்நிலையில்
தந்தையின் கைவிரல்பிடித்து
நடக்கையில்
எதிர்திசையில் வரும்
வணக்கங்களுக்கு
பதில் வணக்கம் சொல்வதிலேயே
என் தந்தையின் கைவிரல்கள்
எனக்கு கிடைக்காமலேயே
போய்விடும்....
உன் காதலும் அப்படித்தானோ...

4 comments:

மர்மயோகி said...

புகுந்து விளையாடுகிறீர்களே "கவிதாயினி?"

பிரேமி said...

புகுந்து விளையாடுகிறேனா....எப்படி?

kovai sathish said...

வித்தியாசமான பார்வையில்...கவிதை

பிரேமி said...

நன்றி சதீஷ்...:-)
கவியுடன் இணைந்தருங்கள்...