Wednesday, March 30, 2011

விழித்துக்கொள் மானிடா!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZlXCo1nQvD0BpPNfjen_wUeWZ8TnxuxPzG4cO3fBGejhHot2hGg8tA5z2s_PzIEY0WG3C8pz3fAox4zOB_o2ACWaSehKY9_i88cuXOcjgOuAc8HkBJl3ZYg1_WtbLMRaO8mEztBloc-n9/s1600/naxalite-rule.jpg


விழித்தெழுந்து விழித்துக்கொள் மானிடா!
பொய்ச்சொல் வீரர்கள்
பொடிநடையாய் வருகின்றனர்....
தேடியதை தருகின்றனராம்.... - நம்
உழைப்பில் வாங்கி நமக்கே....

கூவி கூவி விற்கின்றனர் - நமது
தன்மானத்தை இந்த புண்ணியவான்கள்!
சுயமரியாதை சுவரொட்டி
விளம்பரமாய் சிரிக்கின்றது!
நாளுக்கொன்றாய் நமது உரிமைகள்
நாட்காட்டியாய் கிழிக்கப்படுகிறது!

மனித நேயம் முற்றிலும் மறந்து
மனமற்ற சமுதாயமே மலர்ந்துள்ளது!
பாரதம் இங்கு பங்கு போடப்படுகின்றது...
கேட்கும் திறன் இல்லையென்றாலும்
கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுவோம்...

பொறுத்தாள்வார் பூமி ஆள்வார் - இங்கு
பொறுத்திருந்தால் பூமியே புதைந்துவிடும்
அகிலத்தில் அநியாயம் ஆட்டம் போடுகிறது!
அடங்கி இருந்தால் அடிவானமும் அழிந்துவிடும்!
அங்கிருக்கும் விண்மீன்களும் விலை பேசப்படும்!
சொல்லிச்சாகும் நானே இதற்கு துணிவாய் நின்று
தரகு பேச தயாராகிவிடுவேன் தயக்கமின்றி...

கள்ளங்களும், கயமைகளும் நிறைந்த - இந்த
உரசியல் கொண்ட அரசியல் நமது
வெள்ளை நிலவையும் விட்டுவைக்காது...!
வேரில் நெருப்பு வைத்தால்
விளைச்சல் எங்கிருந்து வரும்?
என் தேசத்தை சுவைத்துப் பார்க்க
பூவா தலையா போட்டுப் பார்க்கின்றனர்!

தொய்வடைந்த தோழர்களே!
சட்டங்களும், திட்டங்களும் போட்டு
கேலிச்சரித்திரம் பேசும் - இந்த
போலிச் சமுதாயத்தை மாற்றிடுவோம்..!

2 comments:

S.V.Sai baba said...

Kalathirketra arumayana karuthulla kavidhai.
Vazhthukkal

பிரேமி said...

மிக்க நன்றி...:-)