Wednesday, June 29, 2011

என்றும் உன்னவள்......

http://image.blingee.com/images18/content/output/000/000/000/73f/719939626_1508496.gif?4


விழிகளில் உற்சவம் நடத்தி விளையாடியவள்
விழிமுழுவதும் கடலாய் கோர்த்திருந்தேன்...
வார்த்தைகளற்ற வாக்கியங்களுடன்
மௌனம் மட்டுமே மொழியாக வியர்த்திருந்தேன்...

பகல் இரவு இல்லாத வாழ்க்கையை
உன்னுடன் பகிர்ந்து வாழ காத்திருந்தேன்...
இதயக் கூட்டிற்குள் உன்னை மட்டும்
இமயமாய் வைத்துப் பார்த்திருந்தேன்...

நினைவிழந்த நிலையிலும் _ என்
நிதானம் தவறாமல் உன்னை சரணடைந்தேன்...
காலங்கள் யாவும் உன் மடி தேடி
காதலாய் என் கண்ணியம் காத்திருந்தேன்...

தூணிலும் துரும்பிலும் இறைவனாம்!!!
உணர்வற்ற இடங்களில் அவன் மட்டுமே...என்
ஊணிலும் உயிரிலும் நீதானடா!!!
உணர்வும் உலகமும் நீ ஒருவன் மட்டுமே...

Monday, June 27, 2011

ஞாபகக் கீற்றுகள்

காலைத் தென்றலில்
பனித்துளியின் குளிர்ச்சியில் - உன்
ஞாபகக் கீற்றுகள் மென்மையாய்
என்னைச் சுற்றுகின்றன....
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRGyc7QT2m9sahhR5KZYPgHNwNfnhq8B4yzVegd1PjUk5_kf9l3
வாழ்க்கையின் தத்துவம் அவரவர்
வசதிக்கேற்ப மாறுகிறது!
உயிரை உரித்தெடுக்கும்
உன் ஞாபகப் போராட்டத்தில் - என்
உள்ளமும் உலர்ந்துதான் போகிறது!


சடுதியில் நீ உதிர்த்துச் செல்லும்
உன் உஷ்ணமிகு வார்த்தைகளை விட
உன் பேரமைதி கொடுமையானது!
உன் சொற்களின் கனத்தில் - இங்கு
எல்லாமே சுரமிழந்து கிடக்கின்றன!

எப்போதும் திறந்த விழிகளுக்குள்
வந்து போகும்
உன் பாராமுகத்தில் மௌனமாய்
என் முகம் தாழ்ந்து தவிக்கும்!
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR2RsqmxQturIBlZySw-Wi2pjsBGZFhf_h_5Y8cwjt39eRhPceBPg
இலவசத்தின் உச்சத்தில்
எம் நாட்டு தலைவர்களுக்கு
நீயும் சளைத்தவனல்லடா....
உன்னால் விநியோகிக்கப்படும்
இலவச காயங்களில் - என்
இதயம் எப்போதும்
ஆறாத ரணங்களுடன்
ரிதமிசைக்கின்றன!


என்னிலிருந்து
விலகிச் செல்லும் உன்
ஊடலின் வேகம்
சில நேரங்களில்
மதம் பிடித்த யானையையும்
பின்னுக்குத் தள்ளுகிறது!

http://nitharsanam.net/wp-content/uploads/2007/04/IND.ele.jpg
என் ஒவ்வொரு காயத்தின்
ரகசியத்தின் ஜீவிதத்தில்
ஜீவனாய் நீ மட்டுமே!
என் காதலின் தாகத்தில்
துயரமே தூர்வார்க்கப் படுகின்றன!

ஆயினும்
உன்னால் நிரப்பப்படும்
என் விழிகளின் நீரினிலும்
உனக்கான காதல் நிறைந்திருக்கும்
உன் துதி பாடியே வழிந்திருக்கும்!

Tuesday, June 21, 2011

நீயும் வள்ளல்தானே...!

ஊர் உறங்கிய பின்னும்
உலா வரும் நிலவாக
உறங்காமல் உலா வருகின்றேன்
உன் உயர்ந்த நினைவுகளுடன்!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=1030077352725&id=d80a75ca8104afd2bb2af57107bbed34
என் கனவிற்குள்
என் அனுமதியின்றி
உன்னால் மட்டுமே
உள்ளே நுழைய முடியும்!

இதோ இங்கு வீசும் காற்றுடனும்
பேச ஆரம்பித்துவிட்டேன்...
தோட்டத்து மரமும் தோழியாகி
யோசனை சொல்கின்றது!

இரவினில் தேம்பியழும்
பூனையின் அழுகுரலில்
எப்போதும் நடுங்கும் இதயம்
இப்போதெல்லாம் அதை
தடவிக் கொடுக்க தயாராகின்றது!

http://ts1.mm.bing.net/images/thumbnail.aspx?q=996704387972&id=7056ec1f50d2408087ec5ece02770fef
ஏதோ ஒன்றினால் இதயம்
பலமடையும் என்பதை
உன் வரவால் உணரமுடிகிறது!
இந்த உயிர்த்துடிப்பு இயங்குவதன்
நோக்கமும் உனக்கான ஆக்கம்தான்!

உனது நேசத்தின் நெருக்கத்தில்
அமைதியாகும் என் சோகங்கள்!
என் காதலின் பயணத்தில்
ஓய்வு என்பதே கிடையாது!

ஆதலால் அன்பே.....

கடையேழு வள்ளல்களின் கணக்கில்
ஒன்றை சேர்த்துக் கொள்கின்றேன்!
நான் இரவாமலேயே எனக்கு
இதயம் கொடுத்த நீயும் வள்ளல்தானே...!

http://ts2.mm.bing.net/images/thumbnail.aspx?q=957908266801&id=3e3bf0608889f7390baf960f3d954b53
இருப்பினும்
உன் இணக்கம் வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க - இந்த
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை.....!!!

மருந்திடுவார் யாரோ?

இதோ
இந்த இருண்ட வானத்தின்
வாசற்படியில் வலுவிழந்து நிற்கின்றேன்...
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQkQ9C_fV0N2E-gJ2Sl4cpxyUd_mh5IZkoDLKBMO7WVeLuECXYH
எங்கே நான் விழுவது?
என் கரங்களின் ரேகையை
என் விதி அழித்துவிட்டது!

வாழ்க்கை என்னும் கடலில்
பயணிக்கும் போது
துடுப்புகளே தொலைந்து போனால்
தூண்டிலை வைத்து என்ன செய்வது?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7Y1SdCrRRg3YRxK0F7kmp7zc21C0RfYat2sVB3z_vqHJiihuCZV4uL2Ta9opMweIZomCqEHN5wlxCpcyPwJDEuxrinR0mdIGU_bH9zQj_mXTyKLhHpdDQIXa_dztlDDZxaYNL-BFwfQSB/s400/Row+Boat+and+River.png
ஏமாறுதலின் ஏகாதிபத்தியமே
என்னிடம்தான் உள்ளது...
இருந்தும்
சாயம் பூசிய வண்ணக் கோழிக்குஞ்சாய்
வலம் வருகின்றேன் வீழ்வதறிந்தும்...!!
http://ts3.mm.bing.net/images/thumbnail.aspx?q=1012895327994&id=f528d43307f314c5fc5a1799c31a1cdc
என்னைத் தொடர்ந்து வந்த
என் பாதங்கள்
இப்போது என் பயணிப்பை
தனித்து விட்டுச் செல்கின்றன....

எப்போதும் பார்த்துக் கொண்டிருந்த
பூச்செடி
இப்போதெல்லாம்
கள்ளி செடியாகவே தெரிகிறது!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSECEMqtV4CogYp1ftPHIrl8v86JB0vKIcxTYrprCdyJr2Q_M2Oow
இதயம் முழுதும்
பாறையாகி விட்டதால்
விதைக்கும் விதைகளும்
வீரியமற்றே கிடக்கின்றன....

காலங்களை பிடித்திழுக்கும்
இந்த காயங்களில் மருந்திடுவார் யாரோ?
அந்தி சரிகின்ற போதெல்லாம்
என் புலம்பல்கள் புலம்பெயர
ஆரம்பிக்கின்றன....
http://i5.photobucket.com/albums/y175/nilavunanban/Love_Pain.jpg
விழிகள் விரிய விசாரிக்கின்றேன்
விருப்பத்தின் வாசலில் விளிக்கின்றேன்
விரையும் வினாடிகளிலும்
விதியோடு விளையாடுகின்றேன்...




Sunday, June 19, 2011

ஒற்றைச் சுவராய்......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS7Giz7tJg7LYrPlUQ3_ZM843Gx4rmGeXRrZiqvABOQcjitqpcM
காதலின் ஊடலில்
செந்தனலாய் வார்த்தைகளை
நீ
வீசினாலும்
பொறுமையின் பாரத்தை
சுமத்தியதும் நீயல்லவா....


நீ
பயணிக்கும்போது
கடந்து செல்லும்
ஒற்றை மரத்தின்
நிழல்ல நான்...
உன்
பாதச் சுவடுகளின்
வழியே தொடரும்
உனக்கான ஈர நிழல் .....
http://www.desicomments.com/dc1/07/127160/127160.gif
என் நிலைப்பாட்டை
நீ
அறிகிறாயோ இல்லையோ
உன்
காலம் அறியும்!


விதி முடியும் முன்பு
மலரத் துடிக்கும்
என் கனவினை அள்ளி
உன் காலடியில் விரிக்கின்றேன்..
http://www.desicomments.com/dc1/07/127162/127162.gif
தூசு படிந்த இலையாய்
என்னுள் படிந்த
உன் நினைவுகளை
துடைத்து எடுக்க துணிந்ததில்லை
....


சுகத்தோடு வாழ்ந்த எனக்கு
இன்று
என் அகத்திற்கும் ஆபத்தாம்...
மன பாரம் ஏறி ஏறி
உடல் பாரம் குறைந்து விட்டது..

உன்னிடம் உரையாடமல் இருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் உணர்வுகளும் மெல்லமாய்
சாகடிக்கப் படுகின்றன...
http://www.desicomments.com/dc1/07/127164/127164.jpg
உறவைக் கொடுத்து
உயிரைப் பறிக்கும் வார்த்தைகளை
நீ கற்ற இடம்தான் எது...?

பகட்டாய் வாழ்ந்திருந்தவள்
இப்போது
பயணத்தின் வழியே பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவராய் நிற்கின்றேன் - உன்
நேசத்தின் மாறுதலுக்கப்புறம்...

http://www.tamilun.com/upload-files/raj/east/dsc00050_800x600-w600.jpg

Saturday, June 18, 2011

வரை பட நிழல்

சுவரில் தொங்கும்
வரைபட பறவையின்
நிழலில் கூட
நிஜமாய் நீ.....!
எத்தனையோ உறவுகள்
கண்முன்னே உறவாட
மனம் மட்டும் மௌனமாய்
தேடிப் போகிறது
வரை பட நிழலினுள்
இருக்கும் நிஜத்தை...!

http://www.netglimse.com/images/events/love/wallpapers/LoveRomanticWallpapers19_1152.jpg
தினமும்
ஏதோ ஒன்றை
தொட்டுக் கொண்டே
உன்
தொடர்பை தொடர்கின்றேன்!
தொடர்தல் முற்றுப்பெறாத
நதி நீராய்......

Tuesday, June 14, 2011

என்னவனே...வருவாயா?



http://mixphotos.files.wordpress.com/2008/12/oceanic-lovers-jim-warren.jpg
அருகிலிருந்தும் அந்நியமாகும்
உறவுகளுக்கு மத்தியில்
அன்பின் ஆதவனாய் .... என்னவன்

இரத்த நாளங்களில்
எத்தனையோ ரணகளங்கள்
வருடிச் செல்லும்
மயிலிறகாய் .... என்னவன்

நித்தம் நித்தம் நினைவுகளில்
சிக்கித் தவிக்கும் நிலையில்
கை கொடுக்கும் தேவனாய் .... என்னவன்

தேடல்கள் யாவும் என்னை
தீண்டாமலே போகும் பொழுது
புதையல் பொக்கிஷமாய்...என்னவன்

நெருஞ்சி முள்ளாய் வாழ்க்கைப் பயணம்
வழிகாட்டும் வானவில்லின்
நந்தவனமாய் .... என்னவன்

அங்கத்தில் இடம்பிடித்தவனே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKoAL1nOWDIjOBlFZG6VaLeLvnLgweuStWaMMXCIyB_wdqp7bc4QiFAC36Y35CJYe73_d9tnIJyPi2Vw8rJ5Djsf0_RW4GcSM7KWFfBzrVQOlAXq6QSjnZluGeVvKSHiG0WGZ_2VnK1U/s1600/The-Lovers-1024x768-bandwidth-thiefA.jpg
விடியும் வரை உன் மார்பில்
நான் கண் துயில வேண்டும்
விடிந்தபின்னும் என் உறக்கம்
கலையாமல் பாதுகாக்க வேண்டும்

உன்னை நினைத்து நினைத்து
வாழ வேண்டும் உந்தன் மடியில்
உயிர் துறக்க வேண்டும் வருவாயா?
__._,_.___


Friday, June 3, 2011

இமைகளுக்குள் இன்னொரு உலகம்..

http://us.123rf.com/400wm/400/400/friday/friday0611/friday061100138/610993-the-image-of-the-girl-wrapped-up-in-a-fabric-on-a-background-of-bubbles.jpg


என்னையையும் ஆட்டுவிக்கும்
இந்த கனவானது.....
இமைகளுக்குள் ஒளிந்திருக்கும்
இனம்தெரியா உருவம்...
இது வருவதற்கு கால நேரமில்லை
பகலில் இதற்கு மதிப்பில்லை
மாலையில் ஒரு மார்க்கமாகத்தான்
உள்ளே நுழைந்து அறப்போர் செய்யும்
இமைகளுக்குள் இன்னொரு உலகமாய்....
நீண்ட இரவில் இது காட்டும்
வேலைத்தனத்தில் இரவின் தருணங்கள்
மென்மையாய் கடந்து செல்லும்
இல்லையேல்...
மொத்தமாய் ஆளைக் கடத்தி விடும்...
பிரம்ம நேரத்தில் இதன் போக்கிற்கு
எப்பவுமே தனி மவுசு உண்டு......
இமைகளுக்குள் இன்னொரு உலகம்.....
இயலாமை எல்லாமே இந்த கனவிற்குள்
இனியதாய் சங்கமமாகிவிடுவதால்
கனவின் தனித்தன்மையை
யாரும் மறுப்பதற்கில்லை....
கனவுகள் மெய்ப்பட்டால்
நிழல் மட்டுமல்ல நிஜமும்
தருமாறித்தான் போகும்..
.

Tuesday, May 24, 2011

தவிப்புகள் தொடர வேண்டாமே....

காரிருளாய் இருந்த வாழ்வில்
கதிராய் வந்தவனே...
மலருக்குள் சிக்கிய
வண்ணத்துப் பூச்சியாய்
எனக்குள் சிக்கிய

கவிதை நீ...

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTq0hdwm7-PVlyuwTwdXoCGJlMtLOesWb4lJ5q5nEEGMBVx6Ay7ig
உன்னருகில் நிற்கும் போதெல்லாம்
இடம் மாறத்துடிக்கும் இதயம்
உன் மலராத விழிகள் கண்டு
இடிந்தேதான் போகிறது....
பழகிய காலங்கள் எல்லாம்
பார்வையில் மேய்ந்து செல்கின்றன...

எங்கே என் மனம்?
இதயத்தின் இரைச்சல்
மென்மையாக
உருகி விழிவழியே
வெளிவந்தபடியே..
ஈரத்தின் தளும்பல்
கன்னங்களில் கண்ணீராய்..

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS7aRcjz-kGgmLwYds7J1vhdpkK7eYuZzZGOorux3KbScsf-QS8
உன் அழைப்பை
இன்று, நாளை - என
எதிர்பார்த்து எதிர்பார்த்து
என் அலைபேசியும்
அடங்கிவிட்டது!
உன்னைத்தவிர
எந்த அழைப்பையும்
ஏற்க அதுவும் மறுக்கிறது
என்னைப்போல்!

எதிர்பார்ப்பற்ற
இதயத்தில்
எண்ண அறுவடைகள்
ஏகாந்தமாய்...ஏகமாய்
விளைச்சலின் காரணம்
நீயல்லவா..!!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSWH8nqXQawPRo4DfrhgCrFa8COb0HvPnhKtnYGpKCQSpGtlVSV
எழுதும் எழுத்துக்களெல்லாம்
உன்னைச் சார்ந்தே இருப்பதினால்
என் பிறப்பின் ரகசியமானாய் நீ..
தேடல்களின் நாடல்கள்
தொடரட்டும்
தவிப்புகள் தொடர வேண்டாமே....
தயவுசெய்து தொடர்ந்துவிடு
உன் பார்வைப் பனிக்கட்டிகள்
பரிவோடு படட்டும் - என்
ஜீவ தாகத்தைக் கொஞ்சமேனும்
தணிக்கட்டும்.....

Monday, May 9, 2011

நீயே என் சந்நிதி....

அந்தி மறைந்து
இருள் சூழ்ந்த தருணம்
இயல்பாய் உன் ஞாபகக்கீற்றுகள்
என் இமைகளுக்குள் தென்றலாய்...

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRUz3vmiYV_vxLUF_8UJj1SfQ0GeLPTKSsz5Fy2HQVQ_JJ-0s_GTw
நதியின் போக்கை தடுத்து
நிற்கும் மலைப்பாறையாய்
என் போக்கை தடுத்து நிறுத்தியது
உன் போக்கு...!!
என் ஆழ்மனமோ
உன் போக்கில் மட்டுமே பயணித்தது!

உன் கண்கள் பேசிய
காதல் மொழியில் கட்டுண்டு
நான் கிடக்கின்றேன்...
நீயோ எனை பார்த்தபடியே
விலகிச் செல்கின்றாய்....
இன்றாவது காதலைச் சொல்லலாம்
என்றிருந்தேன்...பாழாய்ப்போன
தயக்கம் வந்து என்னை
தனியே நிற்கவைத்துவிட்டது

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRb6fH__U-l86cTk0RXmb_qw6LweeSWpFg79XWWLBPCRR0-waJK
நெருப்பை புகை
மறைப்பது போல் எப்போதும்
என் காதலை
மறைக்க இயலவில்லை!
உன் இணக்கமான பேச்சு
தற்காலிக சந்தோஷமாக
இருந்தே மறைந்து போகின்றன!
கலப்படமற்ற சந்தோஷம் காண
உன் நேசம் ஒன்றே சுகமாகும்!

சொற்களைக் கூட்டினால்
சுலோகம்!
கற்களைக் கழித்தால்
சிற்பம்!
கூட்டலும் கழித்தலும்தானே
காதலின் வலிமை!
சுலோகமும் சிற்பமும்
இணைந்தால் அது
தெய்வத்தின் சந்நிதியாகும்!

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTbwBg4TtPmboYUU78OwxE-Dfqeh2fvoUquSGYewdHdoHqXWneUYw
உன் பெயரும், உன் உருவமுமே
எனக்கு
சுலோகமும், சிற்பமுமாகும்
நீயே என் சந்நிதியாவாய்...

Friday, May 6, 2011

விழியும், இதயமும் நீயானாய்...!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcReAhphhEBmVEDf_DyTWZ6klvZhzNeSMR9mNt3q6dwraxJ_aF16
தேவனே....
உன் அறிவிப்பை
எடுத்துச் சொல்லும்
பெரும் காற்று - என்
திசையெங்கும் பரவும்
அப்புறம்!!
நீ வருவதை தென்றலைத்தவிர
வேறு யாரால் மென்மையாய்
சொல்லமுடியும்??

பாசாங்கு அற்ற
பச்சை மனிதனாய்
உன்னைப் பார்த்தமுதல்
எனது
இதயத்திற்கும், விழிகளுக்கும்
ஒரு சின்ன சண்டையானது!
யார்
உன்னை முதலில்
தன்வசம் கொள்வதென்று...
மொத்தத்தில்
என் விழியும், இதயமும்
நீயானாய்...!
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQfXJ0IN5vsekPZxioIxcxjXAmItPsZohdnCnaiapqrWrpECHqu-g
புதிதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டி
நிற்பதற்கு முன் தடுமாறுவதுபோல்
புதிதாய் பிறந்த காதலில்
நிற்பதற்கும் தடுமாறித்தான்
போகின்றேன்...
தடுமாறும் என்னை உன் கரங்களுக்குள்
எப்பொழுது அடைக்கலம்
அளிப்பாய்?....?


என் இதய இருட்டறையில்
உனக்கான காதலை
விதைத்துள்ளேன்! - உன்
விழி வழியால் என்னை
ஒளிரச்செய்தால்
விதை விருட்சமாகிவிடும்..!

செய்யும் செயல் எதுவாயினும்

அது உனக்கானதாகிவிட்டது!
அதனால்தான் என்னவோ
மற்றவைகளின் மேல்
பற்றற்ற தன்மையே வருகிறது!
என் உலகப்பார்வையின் கீழ்
நீ ஒருவன் மட்டுமே
தேவனாகின்றாய்....!
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQsS0P2HPLkvEMNJn-YP6hq53CMdbbYlbqCTPXgT_ThVLphlHrZ
என் எண்ணத்திற்கென்று
ஏதுமில்லை
எல்லாம் உன் வசமானதால்...
விருப்பு வெறுப்பிற்கு
அப்பாற்பட்டவளானேன்
எல்லாம் உன் பொறுப்பானதால்
என்னில் நீயாய்
உன்னில் நானாய்....
உயிரும், மெய்யும் இணைந்த
காவியமாய்....
என் தமிழ் மொழியாய்...
அழியாக்காதலாய்....
கவிபுனைந்து, காதல் செய்து
இளைப்பாறுவோம்...!!!



Wednesday, May 4, 2011

என் இதயத்தில்...


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT-dvdw_JE9GPuecbjnmgEch280MG2lzvINTYmvmVlcGAa2oIIG

சாம்பல் நிற இரவு
சோம்பலாய் கண்மூடி
கிடந்தாலும் மனம்
தாயின் அரவணைப்பைத்தேடும்
குழந்தையாய்....
என் ஞாபகக் கல்லறையில்
உன் வண்ண நினைவுகள்
கண்துயில மறுக்கின்றன!
உறக்கமில்லா இரவில்
என் கண்கள் அழுவதை
என்னால் கூட
அறியமுடியவில்லை!
ஆனாலும் ஏனோ கண்ணீர்
கசிந்தபடி....
காதலின் விரல் நகங்கள்
குத்திக் கிழிக்கின்றன
என் இதயத்தில்...
அன்பு காட்டியது குற்றமா?
அன்பு கேட்டது குற்றமா?
இன்னும் புரியவில்லை...
தொலை தூர சுகத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாற்ற ஏக்கங்களே
மிச்சமாகின்றன!
உள்ளிருக்கும் கவலையுடன்
உன் கவலையும் இப்போது
ஒட்டிக்கொண்டது!
ஒவ்வொரு கணமும்
இறந்த காலம்
நினைத்து நினைத்தே
நிகழ்காலம்
நிஜமிழந்து நிற்கின்றது
எதிர்காலம்
சூனியமாய் சுற்றுகின்றது!
என் மனத் தடாகத்தில்
தொடர்ந்து
உன்னைத்தவிர யாரும்
சங்கமிக்க முடியாது!
உன்னைப் போன்றதொரு
பாதுகாப்பான
சரணாலயம் வேறென்ன
இருக்கிறது எனக்கு?
மேகத்தில் மறைந்திருக்கும்
மழைநீரைப் போல்
எனக்குள்
நிறைந்திருக்கும்
உன்னை
இறக்கிவிடத் துணியவில்லை..!
காலங்கள் இறந்தாலும்
என் காதல்
ஒருபோதும் இறப்பதில்லையடா...!



Thursday, April 28, 2011

வேண்டுமே.....

மாலை நேரச் சூரியன்
மயங்கிய நேரம்!
கடற்கரையின் காலடியில்
பார்க்குமிடமெல்லாம்
உன் பாதங்களின்
சுவடுகளாய் தெரிகிறது!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்....!!
Join Only-for-tamil
நேற்று சந்தித்த
இறுதிச் சந்திப்பில்
நீ கொடுத்த
முத்தத்தின் ஈரம்
இன்னும் காயாமல்...
எப்போதும் காயாமல்
இருக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

என்னை
யார் கடந்து சென்றாலும்
நீ கடந்து போவது
போன்றதொரு சிலிர்ப்பு!!
எப்பொழுதும் நீ
என்னை கடக்க வேண்டுமே!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!
Join Only-for-tamil
உன் எழுத்துக்களிலும்
என் எண்ணங்களிலும்
வளர்ந்த நமது காதல்
பெரு மழையாய்
பொழிகிறது!
வறண்ட வானிலை
வராமலே இருக்க வேண்டுமே!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்!!

நமது முதல் சந்திப்பில்
என்னிடமே வந்து
என்னை விசாரித்த
உனது சீண்டலை நானும்
என் கரங்களை எடுத்து
உன் மார்போடு சேர்த்து நீயும்
பரவசமடைந்தோம்...!!
பரவசம் பருவந்தோறும்
படர வேண்டுமே...!!
அடிக்கும் அலையையும் மீறி
நெஞ்சுக்குள் பேரிரைச்சல்
Join Only-for-tamil
பயணம் இனிதானது
உன்னோடு பயணித்தால்...
வாழ்க்கைப் பயணமும்
உன் ஒருவனோடு இருந்தால்...
பேரிரைச்சல் பெருமமைதி
ஆக வேண்டுமே....
அதுவும் உன் ஒருவனால்
மட்டுமே மாற்றப்படும்...!

உன்னை வெல்வேன்...




கொல்கின்ற தனிமையில்
காலத்தை அளக்கின்றேன்
உறவைக் கொடுத்து
உயிரைப் பிடுங்கும்
உன் வார்த்தையில்
உலகம் மறந்து போனது...
என் காதலின் கண்ணீரில்
கடல் மட்டமும் உயருது!
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQafE9sSE3aUkyXcuOE_7KOM1t6FTwBmdDBxESE1pdvLG-Zseee
மூச்சுக் காற்றாய்
உள்ளே நுழைந்தவனின்
விழிகளின் சந்திப்பில்
விலகலின் வேகம்!

உனக்காகவே உயிர்க்கின்றேன்
உனக்காகவே மரிக்கின்றேன்
என் விதியின்
எண்ணம்தான் என்ன?
விளங்கவில்லை!!!

எங்கேனும் ஒரு தென்றல்
உன்னால் என்னுயிரை
தொட்டுச் செல்லாதா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTsPO5ud-Te40yoKwRwQ-p45rUCJgXuIonqDJYJLK-FimAaxSZY
ஏக்கமாய் எழுதும் எனது
கவிதைகள்
மிதந்து வரும் போது
உன் பார்வையின் பாரம்
பட்டுச் சாகாமலே பறக்கின்றன!

என் இல்லத்தின் விளக்கொளி
மட்டும் நீயல்ல!
என் இதயத்தின்
கர்ப்பக்கிரகமும் நீயே...

உயிருக்குள் உயிராய்
ஊடுருவிய உன்னை
என் உணர்வில் மட்டுமல்ல..
என் உதிரத்திலும் கரைப்பேன்...

சேர்த்து வச்ச ஆசைகள்
எல்லாம் அடைக்கலமாய்
உன் காலடியில் கொட்டுகின்றேன்

புறந்தள்ளி என்னைக் கொல்லும்
உன் உள்ளத்தில் எனக்கோர்
இடம் கொடு இல்லையேல்
கொஞ்சம் விஷம் கொடு..
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQqPo1rsAAaROXt02wgzEOW8YlaUg1dXqTIebamc3zC7fv3ILh79A
கண்ணீரில் கரைந்தாலும்
காலத்தை இழந்தாலும்
காதலில் உன்னை வெல்வேன்...




Wednesday, March 30, 2011

விழித்துக்கொள் மானிடா!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZlXCo1nQvD0BpPNfjen_wUeWZ8TnxuxPzG4cO3fBGejhHot2hGg8tA5z2s_PzIEY0WG3C8pz3fAox4zOB_o2ACWaSehKY9_i88cuXOcjgOuAc8HkBJl3ZYg1_WtbLMRaO8mEztBloc-n9/s1600/naxalite-rule.jpg


விழித்தெழுந்து விழித்துக்கொள் மானிடா!
பொய்ச்சொல் வீரர்கள்
பொடிநடையாய் வருகின்றனர்....
தேடியதை தருகின்றனராம்.... - நம்
உழைப்பில் வாங்கி நமக்கே....

கூவி கூவி விற்கின்றனர் - நமது
தன்மானத்தை இந்த புண்ணியவான்கள்!
சுயமரியாதை சுவரொட்டி
விளம்பரமாய் சிரிக்கின்றது!
நாளுக்கொன்றாய் நமது உரிமைகள்
நாட்காட்டியாய் கிழிக்கப்படுகிறது!

மனித நேயம் முற்றிலும் மறந்து
மனமற்ற சமுதாயமே மலர்ந்துள்ளது!
பாரதம் இங்கு பங்கு போடப்படுகின்றது...
கேட்கும் திறன் இல்லையென்றாலும்
கேள்வி கேட்க கற்றுக் கொள்ளுவோம்...

பொறுத்தாள்வார் பூமி ஆள்வார் - இங்கு
பொறுத்திருந்தால் பூமியே புதைந்துவிடும்
அகிலத்தில் அநியாயம் ஆட்டம் போடுகிறது!
அடங்கி இருந்தால் அடிவானமும் அழிந்துவிடும்!
அங்கிருக்கும் விண்மீன்களும் விலை பேசப்படும்!
சொல்லிச்சாகும் நானே இதற்கு துணிவாய் நின்று
தரகு பேச தயாராகிவிடுவேன் தயக்கமின்றி...

கள்ளங்களும், கயமைகளும் நிறைந்த - இந்த
உரசியல் கொண்ட அரசியல் நமது
வெள்ளை நிலவையும் விட்டுவைக்காது...!
வேரில் நெருப்பு வைத்தால்
விளைச்சல் எங்கிருந்து வரும்?
என் தேசத்தை சுவைத்துப் பார்க்க
பூவா தலையா போட்டுப் பார்க்கின்றனர்!

தொய்வடைந்த தோழர்களே!
சட்டங்களும், திட்டங்களும் போட்டு
கேலிச்சரித்திரம் பேசும் - இந்த
போலிச் சமுதாயத்தை மாற்றிடுவோம்..!

Thursday, March 24, 2011

விட்டு விட்டுத் தொடர்வதில்....

விட்டு விட்டுத்
தொடர்வதில்
நீயும் என் தந்தையும்
ஒன்றுடா...
என் காதலை
எப்படி விட்டு விட்டு
ஏற்கிறாயோ
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-f6elC2ZK0fNbTtoYX-2k9hW2sYL4yS3BZKqBaT59exZil9zD
அப்படியே
சிறுமியாய் இருக்கும்
காலச் சூழ்நிலையில்
தந்தையின் கைவிரல்பிடித்து
நடக்கையில்
எதிர்திசையில் வரும்
வணக்கங்களுக்கு
பதில் வணக்கம் சொல்வதிலேயே
என் தந்தையின் கைவிரல்கள்
எனக்கு கிடைக்காமலேயே
போய்விடும்....
உன் காதலும் அப்படித்தானோ...

Wednesday, March 23, 2011

வயக்காட்டு ஓரத்திலே

http://a34.idata.over-blog.com/600x406/3/05/97/00/Wf9.jpg




ஆண்: வயக்காட்டு ஓரத்திலே
வண்டிகட்டி வந்திருக்கேன்
வாடிபுள்ளே என்னைத் தேடி புள்ளே
உனை கட்டிக்கிட்டு சோடி போட்டு
போகப் போறேன் வாடி புள்ளே
எனைத் தேடிபுள்ளே...

பெண்: பருத்திக்காட்டு பக்கத்திலே
பட்டுக்கட்டி வாரேன் மச்சான்
உனைத் தேடி மச்சான் - எனை
கட்டிக்கிட்டு கூட்டிப் போனால்
தாரேன் மச்சான் என்னைத்
தாரேன் மச்சான்...

(வயக்காட்டு ஓரத்திலே )


ஆண்: தென்னங்காத்து அடிச்சுப் போச்சு
தெருவெல்லாம் உறங்கிப் போச்சு
வந்த நிலவும் மறைஞ்சு போச்சு
வாசமுள்ள ரோசாவே நீ எங்கிருக்க
வாட்டமுள்ள மச்சான் நான் இங்கிருக்கேன்...

பெண்: ஊருசனம் உறங்க்கிக் கிடக்கு
உறவுசனம் முழிச்சுக் கிடக்கு
உன்னை நினைச்ச மனசு கூட தவிச்சுக்கிடக்குது
என் ஆசை ராசா..கூண்டுக்குள்ளே நானிருந்தாலும்
கோழி கூவும் முன்னே வந்து நிற்பேனே...



(வயக்காட்டு ஓரத்திலே)



ஆண்: பச்சை மலை இருளும் கூட பயமிருக்கும்
ஆந்தை சத்தம் அலரல் கூட அரட்டலாக்கும்
எட்டுக்கட்டும் வெட்டியான் பாட்டு கூட பயமுருத்தும்
ஒத்தையடிப் பாதையிலே ஒத்தை சனம் காணலியே
என் அனிச்சம் பூவே எப்படி நீ வந்து சேரப் போறியோ
இந்த மாமன் மனசும் கூட நடுக்கமாகுதே....




பெண்: பச்சை மலை இருளிலும் நம்ம
பேச்சியம்மன் காத்து நிற்பா
ஊருசுத்தும் சுடலை சாமி
என்கூடத்தானே சேர்ந்து வராரு
எட்டு அடி எடுத்து வச்சா நம்ம
காவக்கார அய்யனாரும் சேர்ந்துருவாரு
மிரட்டும் சத்தம் எல்லாம் என்
மாமன் பேரைக் கேட்டாலே மிரண்டு போகுமே
மின்னும் பூச்சி வெளிச்சத்திலே - உன்
கண்ணுக்குள்ள வந்து நிப்பேன்
கலங்காதே என் கருத்த மச்சானே...!


(வயக்காட்டு ஓரத்திலே)




Thursday, March 17, 2011

"மா" தவம்

http://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Ranilaxmibai-1.JPG




மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...

பாரதி கண்ட புதுமைப் பெண்ணும் நானே..
பாசத்தில் என் தாய்வழி வந்த
அடிமைப்பெண்ணும் நானே...
வீட்டில் காணும் சிறுபூச்சிக்கும்
பயப்படுவேன்...
நாட்டில் காணும் விஷப்பூச்சியுடனும்
போரிடுவேன்!!

அந்த மூன்று நாட்களில்
முட்டிபோட்டு அழுதாலும் - எங்களவர்
பெண்மையை சீண்டும்பொழுது
சிலிர்த்தெழுந்து சிப்பாயாய்
வெட்டிப்போட்டு விரைந்திடுவேன்!

வறுமைவந்து வாட்டினாலும்
என் கருப்பையைக் கூட விலைபேசுவேன்!
ஒருவருக்குப் புண்ணியமாய்..! - ஆனால்
ஒருபோதும் என் கற்பை விலைபேசமாட்டேன்...

இலக்கியத்தில் நுகர்பொருளாய்
வலம் வந்த போதும்
நடைமுறை வாழ்க்கையில் மறைமகளாகவே
வலம் வருவோம்...

மாதராய்ப் பிறந்திட "மா" தவம்
செய்ததும் உண்மையே...

Wednesday, March 9, 2011

ஆணிவேரானவன் நீ!



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYtck4qTWZL1N2VqcWQT8uCoPTE8xz9ysOJ61gbvfjuv0-phaVGMZQ7ImdgbS6p0VTtBhcT1lZkAje5HW4fd_jWXtQ2_heEJkdJ2FV5FyVL53WAf2qkT2i5IfoipmE9cEyPYXs3vduVHGc/s320/sad.jpg



செல்லமே....
இரவுப் பொழுது மெல்லமாய்
இறக்கின்றது....ஆனால்
என் இரவு மட்டும் எப்போதும்
வெளிச்சமாகவே இருக்கின்றது!

இயலாமையிலேயே
இதயமும் கிடப்பதால்
எனது காகிதப்பேடும்
வெற்றிடமாகவே கிடக்கிறது...

உன் ஞாபக சின்னங்கள்
நெஞ்சோடு சிதறிக்கிடப்பதால்
என் கண்ணீரின் தூறலில்
கரைந்தே போகின்றேன்...

உன் முகம் மட்டுமல்ல
நீ விடும் மூச்சுக்காற்றும்
எனக்கு ராசிதான் - அதையே
நான் சுவாசிப்பதால்...

என் குலசாமிக்கும் உனக்கும்
ரொம்ப வித்தியாசமில்லையடா
நான் உன்னைக் கேட்டு
கையேந்தினால் சாமியும்
உன்னைப்போலவே எப்போதும்
கல்லாகவே நிற்கின்றது....

நீயோ
எனை காக்க வைத்து
களிப்டைகின்றாய்...
நானோ காத்திருந்து
காயமடைகின்றேன்...
என் தேசம் மட்டுமல்ல
என் நேசமும் தப்பானதல்ல!!

உனக்காய்
காத்திருக்கையில்
நான் காணாமலே ஆகலாம்
ஆதலால் அன்பே - நான்
மறையுமுன் வந்துவிடு
என் சாம்பலையாவது
தொட்டுவிட்டுப் போ
எனக்கு மோட்சம் கிடைக்கட்டும்

நேற்றைய நினைவிலும்
நாளைய கனவிலும்
காலத்தை கழிக்கின்றேன்
என் எண்ணத்தின்
ஆணிவேரானவன் நீ!

என் ஆவியை உன்னிடம்
தொலைத்ததால் பார்ப்பவர்களுக்கு
நான் பாவியானேன்!

தொலைதூர இடத்தில் நீ

இருந்தாலும்
தொலையாத நினைவுகளுடன்
உன்னை தொடர்கின்றேன்

எனை நினைக்க மறந்து
நீ பறந்தாய்!
நினைத்தே இருப்பதால்
நான் இறந்தேன்.....

Wednesday, February 16, 2011

எங்ஙனம் எரிவேன்....?







http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ_Uwfsj-qd4ezuE4mWQg7w6krQnz5sgCg9G8skR73ndPzs-CPfrg

அன்பே...

தேன் சிந்தும் சோலையில்
தெம்மாங்கு பாடும் மாலையில்
உன் பார்வையில்
ஆயிரம் சந்தங்கள்!
பார்த்த எனக்கோ
பல்லாயிரம் சரணங்கள்!

புத்தருக்கு ஓர் போதிமரம்
எனக்கோ நீயோர் ஜீவனுரம்!
உன் வாசகம் பார்த்த
நான் யாசகம் கேட்கின்றேன்!

உனை
எண்ணி நான் எழுதும்
எழுத்தெல்லாம்
என்னவனே உந்தன் சேதி
சொல்லாதோ! - உனை
எண்ணி இருக்கின்ற
கன்னி முகம் பார்க்க
கரைதாண்டி வரமாட்டாயா??

பூமியைத் தேடி வரும்
மழை நீருக்கு
பூமி ஒரு போதும் தடை
செய்ததில்லை! - எனை
நீ வந்தடைய எந்த
இடையூறும் இல்லையடா!

நகரத் தவிக்கும்
என் நேரங்களும் - நீ
என்னில் வந்து சேரும்வரை
அவைகளும் என்னோடு
சேர்ந்து அழுது தீர்க்கின்றன...

எனக்கான அங்குசம் நீ...
வாழ்க்கைப் பாகனாய் - எனை
வழிநடத்திச் செல்!
வஞ்சமில்லாத எந்தன்
நெஞ்சத்தில் வந்து போகும்
வழிப்போக்கன் அல்ல நீ..!

எதுவாக இருந்தாலும்
உனை மீற முடியாத
சுதந்திரம் எனக்கு எதற்கு?

எரிய இருக்கும் உடம்பினில்
ஒரு பாகமாய் இதயம் என்ற
உயிர் மூச்சாய் நீ இருக்கையில்
நான்
எங்ஙனம் எரிவேன்....?

தினம்தோறும் இரவில்
தாயாய் தாலாட்டிட - உன்
மடியிலே கண்துயில
வரம் கேட்டு உன் வாசற்படிவந்து
நிற்கின்றேன் வரம் தருவாய் என்ற
நம்பிக்கையில்......