Sunday, September 18, 2011

எல்லை என் தொல்லைக்கு எப்போது?

http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-8.jpg_Art_paintings_of_girls_b764_display.jpg

வெள்ளி மறைந்த நேரம்
ஒளி சுமந்த கதிரவன்
வீதியெல்லாம் சிவக்க
விதிகாட்டும் வழியினிலே
உறங்காத விழிகளும்
சிவப்பாய் விழித்தன!

மதியும் மறைந்து
அலைகடலின் ஆழத்திற்குள்
அதிவிரைவாய்ப் பயணிக்க
எண்ண ஓட்டமும்
அதிவேகமாய் முந்தைய இரவின்
நிகழ்வை நினைத்து தடுமாறியது!

உன் எண்ணச் சிதறல்களால்
கல்லாகிக் காணாமல் போனேன்
காயங்கள் வடுவாகிக் கண்டேன்
கண்ணீரும் வற்றிப்போக
வழியில்லாமல் போனேன்.....

என்
கனவுக்கும் கால் ஒடிந்தது
கண்டு இடிந்தேதான் போனேன்
ஆறுதல் சொல்ல ஆளின்றி
ஆழிப்பேரலையானேன்....
http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-9.jpg_Art_paintings_of_girls_bi41153_display.jpg
கற்பனை சுகத்தில் மயங்கும் - உனக்கு
மனச்சோகங்கள் எப்போதும்
கலக்கத்தைத் தருவதில்லை...
அர்த்தமற்ற செயலுக்கு
வார்த்தைகளால்
அக்கினி மழை பொழிந்து
வஞ்சிக்கின்றாய்!

உதடு மீறிய உனது சொற்களால்
புதைந்து போன ரணங்களும்
புத்துயிர் பெறுகின்றன!
உன்னோடு உரையாடும்
நேரமெல்லாம்
நெருப்புக்குளியல்தான்!
இறுதியில் சாட்சி சொல்ல
சாம்பல் கூட மிஞ்சுவதில்லை....

வாடைக் காற்றின் வசந்தத்தில்
வஞ்சியிவளின் உள்ளமும் எரிய
சூழ்ந்து நிற்குமிடமெல்லாம்
கருகிய வாசனை!
வாடையில் வருந்திய மயிலுக்குப்
போர்வை தந்த புண்ணியபூமியில்
பிறந்தவன் தானே நீயும்!!
http://img.phombo.com/img1/photocombo/6644/cache/Art_of_Painting__Chinese_Girl_Illustration_wallpapers_1280_x_960_pictures-15.jpg_Art_paintings_of_girls_bi638_display.jpg
ஈர உணர்வுகளை
இழந்து போன உனக்கு
இதயத்தின் வலியை
உணர முடியாது!
வலி மிகுந்த எனக்கோ
விதி வலியது என்பதும்
உணரமுடிகிறது!

போக்கிடம் எனக்கில்லை
போகுமிடம் தெரியவில்லை...
எல்லை என் தொல்லைக்கு
எப்போது?