Saturday, August 20, 2011

வேண்டும்....


காலையும் மாலையும்
காரிருள் வேளையும்
கண்ணோடு - உனை
காணவேண்டும்...
காணாதபொழுதெல்லாம்
மண்ணோடு நானும்
மடியவேண்டும்...

உனக்கானதெல்லாம்
தேடித் தேடி
கொணரவேண்டும் - நீ
வாடியபொழுதெல்லாம்
உனை
நாடி நாடியே
வாரியணைத்திடல் வேண்டும்...

உன்னோடு
ஓடி ஓடியே
பாடித் திரிந்திட வேண்டும்
அதிலே மனம்
ஆடி ஆடியே களித்திட வேண்டும்
தமிழால் உனைப் புகழ்ந்து
கோடி கோடியாய் கவிகள்
புனைய வேண்டும்...

அறுகம்புல்லின் அமைதியாய்
உனை
ஆட்கொள்ள வேண்டும்...
ஆலம் விழுதின் ஆசையாய்
உனை
நேசித்திட வேண்டும்...
இளகும் நெஞ்சம் முழுவதுமே
உனை
நிறைத்தே நினைந்திருக்க வேண்டும்....

உன்
அன்பின் அலையில்
அடித்தே செல்லவேண்டும்...
என்
ஆன்மா அடங்கும்போது
உன்
மடிசாய்ந்து மடிந்திடவேண்டும்...

1 comment:

Anonymous said...

''...அறுகம்புல்லின் அமைதியாய்
உனை
ஆட்கொள்ள வேண்டும்...
ஆலம் விழுதின் ஆசையாய்
உனை
நேசித்திட வேண்டும்...''
nalla vatikal .vaalthukal
Ntjh. Elangathilakam