Saturday, July 2, 2011

காலாவதியாவதில்லை...!

நேற்றைய பகல் முதல்
அந்திவரை நீண்டிருந்த
நேரம் முதல்
உன் அருகாமையற்ற
வேலையின் கனத்தை
அறியத்தொடங்கினேன்...!

இல்லாத தூக்கத்தின் கனத்தை விட

நீயில்லாத ஏக்கத்தின் கனம்
மிகக் கொடுமையானது...!

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQAc2FubO_iJQNJnoh5LjIck9u3Skbi6ExwHvgy9G_znHo5un52
நீ அருகில் இல்லாத போது இருக்கும்
உன் மீதான கோபம் உன் அருகாமையில்
அர்த்தமற்று தோற்றுப் போகிறது!
காதலும் அதுபோல்தான்... - உன்
ஒரு நாள் விலகளில்தான் அதன்
அருமையை உணர முடிகிறது.......

எங்கும் பேரமைதி
இருளாய் எனைச் சூழ
சாகசங்களை நோக்கிச் சென்றவள்
இப்பொழுது வீழ்ச்சியின்
எல்லை வரை சென்று திரும்ப
முடியாமல் தினம் தவிக்கின்றேன்...

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRJ5ErgcAGgsYEnZV1wY3Ng9M5MOqVI3DLd1Gm8xMhUR3iliUizYw
எதிலும் முழுமையான
அனுபவங்கள் இல்லாததால்
அவற்றின் ஊசல் மட்டுமே
ஊஞ்சல் ஆடுகிறது...
ஆனபோதும்
அக்கறையின் பச்சைக்கு
ஆசைப்படுபவள் நானல்ல....!!!

எழுதப்படும் எனது கவிதைகள்
வேண்டுமானால்
காலாவதியாகலாம்! - ஆனால்
ஒருபோதும் என்காதல்
காலாவதியாவதில்லை...!

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR9lxp4K8ij_PqWWCPGuvZ1q53X6QucgAl52RiDQwWJ7PMi0IruRw
இதோ
இந்த அறையின்
நான்கு மூலைகளில்
ஒன்றில் நீ....
மற்றொன்றில் உன் காதல்
ஒரு மூலையில்
உனக்கான என் கவிதைகள்
மற்றொரு மூலையில்
உன் குரலின் எதிரொலி
பெரும்பான்மையானவை
உன்னாலேயே நிரப்பப்படுகின்றன....!!!