Tuesday, December 14, 2010

சித்திரமும், சித்தனும்

இனி
கண்களை குளிர்விக்கும்
மின்னஞ்சல்களோ

இதயத்தை மலரவைக்கும்
மின்னஞ்சல்களோ
உம்மை வந்து சேரப் போவதில்லை!

உங்களது வேதனைக் கதைகளை
உங்களின் இதய வீதிகளே
பறைசாற்றட்டும்!


விழிகளுக்குள் உன் விழி
வைத்துப் போற்றினாள்...
விடியும்வரை விசாலமாய் கனாக் கண்டாள்...
விடிந்தபின் கண்ட கனாக்கள் யாவும்
விட்டில் பூச்சிகளாய் மாறியதும் துடித்து
துவண்டாள்...


தலைகாவிரிக்குக் கண்ணீரை தாரை
வார்த்தவள்
வைகைநதியாய் கண்ணீரும்
வற்றிப் போகவும்
வானம் பார்த்த பூமியாய்
வாடித்தான் போனாள்...
வாசமானவன் வாசல் வரை
சென்றுதான் பார்த்தாள்...


எத்தனை ஜனனம் ஆனாலும் _ நான்
அத்தனை ஜனனத்திலும் உயிராய்
உன்னுடன்

உடன்வருவேன் என்று உருகி
உரைத்தவன்
ஊமையாய் உடன்கட்டை
ஏறிவிட்டான்...


சொல்லாமல் தத்தளித்த சோலைக் குயில்கள்
சொல்லிப்பறந்தன திசை எங்கும்...
சிரித்து விளையாடியவள்
சித்திரமாய் சுவற்றில்!
சித்தம் சிதைந்தவன் சித்தனாய்
பூவுலகில்!

1 comment:

பிரேமி said...

@bpramesh:

ரசித்தமைக்கு நன்றி...இணைந்திருங்கள்